Saturday 28 January 2012

நாட்டாமைக்கே தீர்ப்பா????




நம்ம ஆபீஸ்’ல Internet Password பொதுவா நம்ம எல்லோருக்கும் தெரியும். புதுசா கொஞ்சம் பேரு லாப்டாப் வாங்கிட்டு வந்து பண்ணிய அலப்பரை’ல Internet ரொம்ப Slow ஆகிடுச்சு... இதனால கடுப்பான நம்ம டெமேஜர் Passworஐ மாத்திட்டாரு.  டெமேஜரையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் Password தெரியாது.

இதுவர நம்மள கண்டுக்காதவனுங்க கூட, இப்போ நம்மளுக்கு பயங்கர மரியாதை. ஹி..ஹி.. எல்லாம் Password எனும் மந்திரச் சொல்லுக்குத்தான்.... ஹி..ஹி.. விடுவோமா நாங்க... ஏழு ஊர் ரவுடிய பாத்தவனுங்களாச்சே!!!!

 நாளு நாளைக்கு முன்னாடி ஒருத்தன் வளைந்து, நெளிந்துக் கொண்டே வர்ரான். அப்பவே நான் கணக்கு போட்டுட்டேன்.


தம்பி!!! அந்த Internet Password கிடைக்குமா???

அதெல்லாம் எல்லோருக்கும் குடுக்க முடியாதுண்ணே!!!

தம்பி!! நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்ப்பா.... எனக்கு மட்டும் குடுக்க முடியாதா???

நீ குடுக்க மாட்டே!! நீ Skypeஐ திறந்து உன் பொண்டாட்டியோட பேச ஆரம்பிச்சா, அது முழு கம்பனிக்கும் கேக்குமேய்யா..... அப்புறம் யாரவது கேட்டா, என் தலைலதானே மிளகாய் அரைப்பே!!

இல்ல தம்பி!!!  அப்படியெல்லாம் நடக்காது தம்பி!!!!

அப்போ!! உனக்கு Internet Passworஐ குடுத்தா யாருக்கும் குடுக்க மாட்டேல்ல....

ஆமா..ஆமா...


உன்ன நம்பி தந்தா அந்த குடுத்த வாக்கை காப்பாத்துவல்ல....


ஆமா..... ஆமா....

நீ நம்பிக்கையான ஆளுதானே!!!

உன் நண்பர்கள் யாராவது கேட்டா???

தம்பி!! என்னை நம்பி குடுங்க.. நான் யார் வந்து கேட்டாலும் சொல்லப் போரதில்ல...


நானும் உன்னைய மாதிரிதான். யார் வந்து கேட்டாலும் சொல்லப் போரதில்ல.. போய் வா....

(ஓடுர மாட்டுலயே பால் கறக்குறவனுங்க நாம... நம்ம கிட்டயேவா.......  - மைண்ட் வாய்ஸ்)

தம்பி... அது வந்து.....

டேய்!!! எனக்கு கோவம் வர்ரதுக்குள்ள ஓடிடு.....

ஹி..ஹி.. நம்மளுக்கும் கோவம் வரும்ங்குரத நம்பி ஓடிட்டான்.. நல்ல வேலை.... இன்னும் நம்மளையும் நம்புர எதோ ஒரு ஜீவன் உலகத்துல இருந்துகிட்டுத்தான் இருக்கு....

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அடப்பாவிகளா... அதுக்கு மொதல கேட்டப்பவே நீங்க ஏழு ஊர் ரவுடிகள பாத்தவிங்கன்னு சொல்லியிருக்கலாம்ல??? :-)

    இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது. இவ்வளவு ஆகாது. அவர் தம்பின்னு கூப்பிட்டா //தம்பி... அது வந்து.....

    டேய்!!! எனக்கு கோவம் வர்ரதுக்குள்ள ஓடிடு.....//
    ன்னா சொல்றது... இதுக்காக எதிர்ப்பு போராட்டம் நடத்த போறோம் :-)

    ReplyDelete
  2. // இதுவர நம்மள கண்டுக்காதவனுங்க கூட,
    இப்போ நம்மளுக்கு பயங்கர மரியாதை. //

    என்னிக்கு முட்டுசந்துல வெச்சி கும்ம போறானுகளோ..!?!

    ReplyDelete
    Replies
    1. எப்ப பாரு... முட்டு சந்தி யோசனைலயே இருக்கிறதா?????

      Delete
  3. ஹாஹா. காற்றிருக்கும் போதே தூற்றிக்கொள்.

    ReplyDelete
  4. நடக்கட்டும் ராஜாங்கம்....மாட்ற வரை,...

    ReplyDelete
  5. //ஹி..ஹி.. நம்மளுக்கும் கோவம் வரும்ங்குரத நம்பி ஓடிட்டான்.. நல்ல வேலை.... இன்னும் நம்மளையும் நம்புர எதோ ஒரு ஜீவன் உலகத்துல இருந்துகிட்டுத்தான் இருக்கு....//

    ஹி..ஹி... funny people..

    ReplyDelete