என் கடைசிப் பதிவுல, டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’னு டுபாய் ரோட்ட கொஞ்சம் புகழ்ந்து எழுதிவிட்டேன். அந்தப் பதிவிற்கு இது எதிர் பதிவு. எங்காவது குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தன் சொந்தப் பதிவிற்கே எதிர் பதிவு எழுதிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்...
மேலே உள்ள படங்கள் டுபாய் கிரீக்’னு யாரும் தவறா நினைத்து விட வேண்டாம். இதுவும் டுபாய்’ல உள்ள ஒரு ரோடு’தான். இதில் உள்ள நீர் ஆற்று நீர், அல்லது குள்ளத்து நீர் அல்ல. மலசல கழிவு நீர்.
டுபாய், மற்றும் அபூ தாபியில் இங்கு வேலை செய்யும் தொழிளாழிகள் தங்கவென தனி ஏரியாக்கள் உண்டு. அதில் சோனாபூர் எனும் பகுதியின் புகைப்படங்களே இவையாகும். டுபாயின் மற்றைய பகுதிகளில் செல்வமும் செழிப்பும் கொழித்தாலும் இந்தப் பகுதி சேரியாகவே காணப்படும்.
மது, மற்றும் சூது போன்றவை மலிந்து காணப்படும் இந்தப் பகுதிகளில் போலீஸ், மற்றும் அரசாங்க சேவைகள் அபூர்வமாகவே வரும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலசல கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக பாதையில் நிறையத் தொடங்கிய நீர், வாகனங்கள் போக முடியாத அளவு நிறைந்தது. மலசல கழிவு நீர் என்பதால் பயங்கர நாற்றம் வேறு.
ஒரு சில பங்காளிகள், மிஸ்ரிகள் (எகிப்தியர்) இதை பொருட் படுத்தாது, இந்த நீரில் நடந்து செல்வர். சிலர் ஒரு குருட்டு தைரியத்தில் எப்படியும் கடந்து விடலாம்’னு வாகனத்தை இட்டு, அது நடுவில் போய் நின்றவுடன் நடுவில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பர். அப்போதும் பங்காளிகள் அதை வியாபாரமாக்கி கழிவு நீரில் இறங்கி வாகனத்தை தள்ளிக் கரை சேர்ப்பர்.
இப்படியே கிட்டத்தட்ட 6 - 8 மாதங்கள் கழிந்தது. குளிர் காலமாதலால் அடிக்கடி மழை வந்து நீர் அதிகமாகி சில கட்டிங்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்தது. அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை... முடிவாக யாரோ ஒரு நல்ல மனிதன் பத்திரிகைக்கு அறிவித்து விட, இந்த செய்திகள் புகைப்படத்துடன் பத்திரிகையில் வர அரசாங்கம் விழித்துக் கொண்டது. பாதை சுத்தமாக்கப்பட்டு பழைய நிலைக்கு வர 3-4 மாதங்கள் ஆனது.
மேலே உள்ள படங்கள் டுபாய் கிரீக்’னு யாரும் தவறா நினைத்து விட வேண்டாம். இதுவும் டுபாய்’ல உள்ள ஒரு ரோடு’தான். இதில் உள்ள நீர் ஆற்று நீர், அல்லது குள்ளத்து நீர் அல்ல. மலசல கழிவு நீர்.
டுபாய், மற்றும் அபூ தாபியில் இங்கு வேலை செய்யும் தொழிளாழிகள் தங்கவென தனி ஏரியாக்கள் உண்டு. அதில் சோனாபூர் எனும் பகுதியின் புகைப்படங்களே இவையாகும். டுபாயின் மற்றைய பகுதிகளில் செல்வமும் செழிப்பும் கொழித்தாலும் இந்தப் பகுதி சேரியாகவே காணப்படும்.
மது, மற்றும் சூது போன்றவை மலிந்து காணப்படும் இந்தப் பகுதிகளில் போலீஸ், மற்றும் அரசாங்க சேவைகள் அபூர்வமாகவே வரும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலசல கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக பாதையில் நிறையத் தொடங்கிய நீர், வாகனங்கள் போக முடியாத அளவு நிறைந்தது. மலசல கழிவு நீர் என்பதால் பயங்கர நாற்றம் வேறு.
ஒரு சில பங்காளிகள், மிஸ்ரிகள் (எகிப்தியர்) இதை பொருட் படுத்தாது, இந்த நீரில் நடந்து செல்வர். சிலர் ஒரு குருட்டு தைரியத்தில் எப்படியும் கடந்து விடலாம்’னு வாகனத்தை இட்டு, அது நடுவில் போய் நின்றவுடன் நடுவில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பர். அப்போதும் பங்காளிகள் அதை வியாபாரமாக்கி கழிவு நீரில் இறங்கி வாகனத்தை தள்ளிக் கரை சேர்ப்பர்.
இப்படியே கிட்டத்தட்ட 6 - 8 மாதங்கள் கழிந்தது. குளிர் காலமாதலால் அடிக்கடி மழை வந்து நீர் அதிகமாகி சில கட்டிங்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்தது. அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை... முடிவாக யாரோ ஒரு நல்ல மனிதன் பத்திரிகைக்கு அறிவித்து விட, இந்த செய்திகள் புகைப்படத்துடன் பத்திரிகையில் வர அரசாங்கம் விழித்துக் கொண்டது. பாதை சுத்தமாக்கப்பட்டு பழைய நிலைக்கு வர 3-4 மாதங்கள் ஆனது.
சுத்தமாக்கப் பட்டு பழைய நிலைக்கு திரும்பிய பாதை
இன்னும் சில வெளி உலகுக்கு வராத டுபாயின் கருப்புப் பக்க போட்டோக்கள்.
(கருப்புப் பக்கம்’னு சொல்லிட்டு போட்டோ எல்லாம் கலரா இருக்கே’னு யாராச்சும் சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஜாக்ரத....)
இந்தத் தொளிலாழிகளின் 6 நாள் 12-14 மணித்தியால வேளையின் பின் ஒரு நாள் சுவர்க்கம் (வெள்ளிக் கிழமை). சிலருக்கு அதுவும் பாதி நாள்தான்.
இதுவும் டுபாய் ரோட்டுத்தான் மாக்காஸ்..... இந்த ரோட்டுல ஒரு பிளேட்டு சோத்த கொட்டி, சாப்பிட்டா எப்படி இருக்கும்????