இது நண்பர் வெங்கட்'இன் உலகப் புகழ் பெற்ற பதிவான நாங்கெல்லாம் கணக்குல டைனோசர்!!! பதிவுக்கு எதிர் பதிவு கிடையாது... என்னா இது அந்த அளவுக்கு மரண மொக்கையா இருக்காது..
நாம் ஒன்று'க்கு "1 " என்றும், இரண்டுக்கு "2 " என்றும் எழுதுறோமே! (ஆஹா! என்னா கண்டுபிடிப்புய்யா!!! ) அது ஏன்னு எப்பவாவது சிந்திச்சிருக்கோமா? (ஆபீஸ்'ல வெட்டியா குந்திட்டு இருந்தா இப்படித்தான்ய யோசிக்க தோணும்... புரிஞ்சுதுல்ல ...சரி விடு...) ஏற்கனவே நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையும் ஐன்ஸ்டீன் இன்னும் பலதையும் (அது என்ன'ன்னு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?) கண்டு பிடுத்து விட்டதால் நாம நம்ம மூளையை.. அதாங்க "GRAINN "னும்பான்களே! பாவிச்சு (இதுல காமெடி கீமெடி ஏதும் இல்லையே) ஏதாவது கண்டு பிடிக்கலாம்'னு யோசிச்சப்போ இந்த மேட்டர் மனதில் பட்டது.. ( மூளைய பாவிச்சா மூளைலதனே படனும். அது எப்படியா மனசுல பட்டிச்சு..)அப்படின்னு சொன்ன நம்பவா போறீங்க... எங்க இருந்து சுட்டா என்னங்க... மேட்டர் நல்ல இருந்தா சரிதானே! எந்தக் கோழி போட்ட முட்டையா இருந்தா நமக்கென்ன... ஆம்லேட்'தானே முக்கியம்...இப்போ மேட்டர்'க்கு வருவோம்... நாம் ஏன் ஒன்றை "1 " எனவும் இரண்டை "2 " எனவும் எழுதுகின்றோம். இதுல கூட லாஜிக் இருக்குங்க.... நாம் முன்னைய கால இலக்க வடிவங்களை (அது என்னங்க முன்னைய காலம் பின்னைய காலம்'ன்னு கேட்காதீங்க... எதை எதையோ மாத்துற நம்மாளுங்க, இலக்க முறையை மட்டும் சும்மா விடுவாங்களா?) பார்த்தோமானால், அதற்கு பதில் கிடைக்கும். ஆமாங்க... இந்த இலக்க உருக்களில் உள்ள கோணங்களின் எண்ணிக்கையே அந்த இலக்கமாகும்... உதாரணமாக "1 " என்பதில் ஒரு கோணம் உண்டு..."2 " என்பதில் இரு கோணம் உண்டு.. "0" என்பதில் எந்த கோணமும் கிடையாது... இவ்வளவுதான் மேட்டர்...
இதை ஏற்கனவே E -mail 'ல பார்த்திருந்தால் ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... பார்த்திருக்காவிட்டாலும் வாசிச்சுட்டு ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... நீங்க ஓட்டு போட்டா போதும்... ஓட்டு போட்டா மட்டும் போதும்..