Sunday 18 December 2011

அவனா நீயு!!! உண்மைக் கதை



எங்க ஊருல காலேஜ் போய்கிட்டு இருந்த நான் எங்கம்மா ஊர் காலேஜ்’ல போய் சேர்ந்த புதுசு. அங்க உள்ள ஆளுங்களையும் சரியா பழக்கம் இல்ல. நண்பர்கள்’னு சொல்லிக்கிரதுக்கும் யாரும் இல்ல. அது ஒரு இக்கட்டான கால கட்டம். அதுல நடந்த ஒரு கருப்பு சம்பவம்.

ஒரு நள் காலேஜுக்கு போய் கொண்டிருக்கிறேன். காலேஜ் முன்னாடி பசங்க ஒரு வயோதிபரை கிண்டலும் கேலியும் பண்ணிகிட்டு இருக்கானுங்க.. கிராமத்துல இருந்து நகரத்துக்கு போற ஹீரோவுக்கு அநியாயத்தை கண்டால் நரம்பு புடைக்கிரதும், முகம் சிவக்குரதும், கோவம் தலைக்கேறுரதும் இயற்கைதானே.. ஆனாலும் எனக்கு அப்படி நடக்கல.. ஹி..ஹி.. எதையாவது பண்ணிட்டு காலேஜ் ஆரம்பத்துலயே அசிங்கப் படனுமா’னு ச்சும்மா இருந்துட்டேன்.

ஆனாலும் இந்த எரிமைலைக்குள்ள இருந்து ஒரு குளிர் நீர் ஊற்று வெளியாகிடுச்சு.. யாரும் தப்பா நினைக்காதீங்க.. எனக்கு அந்த வயோதிகர பாத்து ரொம்ப பாவமாயிசுச்சு’னு சொல்ல வர்ரேன். நானும் பக்கத்துல போயி ரொம்ப பாவமா பாக்க, அவருக்கும் எனக்குள்ள உள்ள அன்பு, கருணை Etc....  வெளங்கி இருக்கும்’னு நினைக்கிறேன். அவரும் நம்ம தோலில் கையைப் போட்டுக் கொண்டு “பாருங்க தம்பி.. எல்லா பசங்களும் என்னைக் கேலி பண்ணுராங்கப்பா’னு சொல்ல என் கல் மனசும் கரைஞ்சு போயிடுச்சுப்பா.... கரைஞ்சு போயிடுச்சுப்பா!


அந்த நேரம் பார்த்து நம்மள யாரோ கூப்புடுர சத்தம். யார்’னு பார்த்தா, நம்ம நண்பன் க்ரேஸி. அப்போ க்ரேஸி நம்மளோட அவ்ளோ பழக்கம் கிடையாது. Fresh Friend.

டேய்!! அவன் கூட என்னய்யா பண்ரே!!!

இல்ல மச்சான். எல்லானும் அந்த ஆள கேலி பண்ரானுங்க.. பார்த்தா பாவமா இருக்குப்பா...

அடச்சே!!!! அவன் யாருனு தெரியுமா?? அவன் எங்க ஊரு பைத்தியம்’டா...

பார்த்தா அப்படி தெரியலயே!!!

பாத்தா தெரியுரதுக்கு பைத்தியங்களுக்கு கவர்மெண்ட் யுனிபார்ம்’ஆ குடுத்திருக்கு??? இல்ல, எங்கயாவது பைத்தியம் தன்னை பைத்தியம்’னு சொல்லி இருக்கா???

ஆமால்ல..

இன்னொரு மேட்டர் தெரியுமா??? அவனுக்கு பசங்க’ன்னா ரொம்ப புடிக்கும்...

அவ்வ்வ்வ்... அவனா இவன்????
மச்சான்!! இப்போ நடந்தத காலேஜ்’ல யாரும் பாக்கலையே!!!!

போடா...டேய்!! பக்கத்துல காலேஜ்’ல படிக்கிரவன் கூட பாதி பேரு பாத்துட்டு போய்டாண்டா....

ஆஆஆஆ.......................!!!!!

இந்த சம்பவத்தால நான் பட்ட அசிங்கமும் அவமானமும் வருடக் கணக்காக என்னை ரவுண்டு கட்டி தாக்கியது.

11 comments:

  1. ஹா.ஹா.ஹா.ஹா. செமயாக பல்பு வாங்கியிருக்கீங்க பல காலம் இதை வைத்தே உங்களை கலாச்சிருப்பாங்க

    ReplyDelete
  2. ஹா., ஹா., ஹா..!!

    // எங்கயாவது பைத்தியம் தன்னை
    பைத்தியம்’னு சொல்லி இருக்கா??? //

    ஆமா.. நீங்க ஒருதடவை கூட இப்படி
    சொன்னதேயில்லை தானே..!

    ReplyDelete
  3. பல்பு கண்ணா பல்பு

    ReplyDelete
  4. //இந்த சம்பவத்தால நான் பட்ட அசிங்கமும் அவமானமும் வருடக் கணக்காக என்னை ரவுண்டு கட்டி தாக்கியது.//

    விடுங்க பாஸ்...இதெல்லாம் ஜகஜம். :)

    ReplyDelete
  5. @ K.s.s.Rajh said...

    /// ஹா.ஹா.ஹா.ஹா. செமயாக பல்பு வாங்கியிருக்கீங்க பல காலம் இதை வைத்தே உங்களை கலாச்சிருப்பாங்க///

    ஆமா.. பாஸ்... ஒரு வருஷமா... ரெண்டு வருஷமா??? ஷப்பா...

    ReplyDelete
  6. @ வெங்கட் said...

    //// ஹா., ஹா., ஹா..!!

    // எங்கயாவது பைத்தியம் தன்னை
    பைத்தியம்’னு சொல்லி இருக்கா??? //

    ஆமா.. நீங்க ஒருதடவை கூட இப்படி
    சொன்னதேயில்லை தானே..!/////

    நீங்க எப்போ சொன்னீங்க......

    ReplyDelete
  7. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    ////பல்பு கண்ணா பல்பு///

    100 வாட்ஸ் பல்பு.. செம பவரு...

    ReplyDelete
  8. @ வெளங்காதவன் said...

    // :-)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  9. @ சேலம் தேவா said...

    /// //இந்த சம்பவத்தால நான் பட்ட அசிங்கமும் அவமானமும் வருடக் கணக்காக என்னை ரவுண்டு கட்டி தாக்கியது.//

    விடுங்க பாஸ்...இதெல்லாம் ஜகஜம். :)///

    ஹி..ஹி.. ஆமா.. ஆனாலும் நானும் எவ்ளோதான் அவமானப் படுரது...

    ReplyDelete