Saturday 12 November 2011

வெளிநாட்டு வாழ்க்கை


வேலை செய்யப் பிடிக்கவில்லை
உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை
தங்குமிடமும் பிடிக்கவில்லை
உடன் தங்குபவர்களையும் பிடிக்கவில்லை
பிரயாணம் செய்யவும் பிடிக்கவில்லை
உடன் பிரயாணம் செய்பவர்களையும் பிடிக்கவில்லை
சாப்பாடும் பிடிக்கவில்லை
சமைக்கவும் பிடிக்கவில்லை
காலநிலையும் பிடிக்கவில்லை
இங்குள்ள அரசியலும் பிடிக்கவிலலை
ஆட்சி செய்வோரையும் பிடிக்கவில்லை
இந்த நாட்டையே பிடிக்கவில்லை
இத்தனையும் பிடிக்காவிட்டாலும்
வருடக் கணக்காக 
இங்கே குப்பை கொட்டுகிறேன்
காரணம்
திர்ஹம்களை
ரொம்பப் பிடித்திருக்கிறது

14 comments:

  1. எனக்கு அப்படி தோன்றவில்லை...

    ReplyDelete
  2. ஆஹா....
    இப்படியெல்லாம் பேசுவீங்களா......

    வீடு குடும்பத்தை பிரிந்தவர்களின் ஏக்கம்தான் இது....
    ம்..ம்...
    சீக்கிரம் கல்யாணம் பண்ணி மனைவியை கூட்டி வரும் வேலையை கவனிங்க தம்பி.....

    வீடு பிடிக்கும்...
    சமையல் பிடிக்கும்...
    பயணங்களும் பிடிக்கும்....
    வீட்டில் வேலை செய்கிற ஆயா கூட பிடித்துவிடும்.....

    ReplyDelete
  3. ////ஆனால் வருடக் கணக்காக
    இங்கே குப்பை கொட்டுகிறேன்
    காரணம்
    திர்ஹம்களை
    ரொம்பப் பிடித்திருக்கிறது
    /////
    சரியாகச்சொன்னீங்க

    ReplyDelete
  4. NIHAZA.... what a comment.....

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.ஃபைக்,
    "புன்னகையே வாழ்க்கை" என்று தலைப்பு வைத்துக்கொண்டு...
    "திர்ஹாமே வாழ்க்கை" என்று வாழ்ந்து கொண்டிருப்பது புரிகிறது..!

    நொந்து போய்த்தான் எழுதி இருக்கிறீர்கள்.

    சகோ.நிஹாஸாவின் மேற்கண்ட ஒரு அதிரடி பின்னூட்டத்திற்கு தங்களின் பதிலை கண்டபிறகு...

    இறைநாடினால்... இப்பதிவின் வரிக்கு வரி உங்களுக்கான 'எதிர்பதிவு' ஒன்றை வாசிக்க தயாராகிக்கொள்ளுங்கள் சகோ...!

    (நீங்களும் எவ்ளோ காலம்தான் உங்களுக்கு நீங்களே எதிர்பதிவு போட்டுக்கொள்(ல்)வீர்கள்..? அதை வேறு யாராச்சும் போட்டால்தானே நன்றாக இருக்கும்..? என்னா நான் சொல்றது..?)

    ReplyDelete
  6. @ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

    /// ஸலாம் சகோ.ஃபைக்,//
    ஸலாம் ஆஷிக்
    /// "புன்னகையே வாழ்க்கை" என்று தலைப்பு வைத்துக்கொண்டு...
    "திர்ஹாமே வாழ்க்கை" என்று வாழ்ந்து கொண்டிருப்பது புரிகிறது..!

    நொந்து போய்த்தான் எழுதி இருக்கிறீர்கள்.///

    ம்ம்.. ரொம்பவே.....

    ////சகோ.நிஹாஸாவின் மேற்கண்ட ஒரு அதிரடி பின்னூட்டத்திற்கு தங்களின் பதிலை கண்டபிறகு...

    இறைநாடினால்... இப்பதிவின் வரிக்கு வரி உங்களுக்கான 'எதிர்பதிவு' ஒன்றை வாசிக்க தயாராகிக்கொள்ளுங்கள் சகோ...!///

    அய்யோ!!. அந்தப் பதில் நான் போட்டதில்ல...

    ///(நீங்களும் எவ்ளோ காலம்தான் உங்களுக்கு நீங்களே எதிர்பதிவு போட்டுக்கொள்(ல்)வீர்கள்..? அதை வேறு யாராச்சும் போட்டால்தானே நன்றாக இருக்கும்..? என்னா நான் சொல்றது..?)///

    ஓ.கே!!! ஓ.கே!!! உங்கள் எதிர் பதிவு வரவேற்கப் படுகிறது..

    ReplyDelete
  7. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க...எல்லாம் பிடிக்கும்...

    ReplyDelete
  8. அப்ப ஊருக்கு திரும்பி போக வேண்டியதுதானே !

    ReplyDelete
  9. மச்சி பிடிக்கல பிடிக்கல எண்டு சொல்ரின்களே... அந்த ஊரு பொண்ணுங்கள பத்தி சொல்லவே இல்லையே??????



    யாருப்ப அது அனானி தாக்குதல் நடத்துறது ?????



    பாஸ் சீக்கிரமா லீவ போட்டுட்டு வந்து மனைவிய பாத்துட்டு போங்க.............. இப்படியே விட்டிங்கன்னா அப்புறம் அங்கயும் ஒரு அங்கோட தேட வேண்டி வரும்

    ReplyDelete
  10. //HajasreeN said...
    மச்சி பிடிக்கல பிடிக்கல எண்டு சொல்ரின்களே... அந்த ஊரு பொண்ணுங்கள பத்தி சொல்லவே இல்லையே??????//

    ஆமால்ல!
    இது செல்லாது! செல்லாது!
    அதுக்கு ஒரு பதிவு தனியா போடுங்க பாஸ்! :-)

    ReplyDelete
  11. ஆமால்ல!
    இது செல்லாது! செல்லாது!
    அதுக்கு ஒரு பதிவு தனியா போடுங்க பாஸ்! :-) //


    மறுபடியும் முதல் ல இருந்தா அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    சில கசப்பு மருந்துகளை தேன்கலந்து கொடுப்பார்கள்
    நீங்கள் அப்படியே கொடுத்து விட்டீர்கள் அவ்வளவுதான்

    கேட்பவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் உண்மை

    நன்றி சகோ

    ReplyDelete
  13. ஆபீஸில் இ.நெட் பிரச்சனை பண்ணுவதால் யாருடைய கமெண்ட்ஸ்க்கும் ரிப்ளை பண்ணவில்லை. மன்னிக்கவும்..

    ReplyDelete