Sunday 13 November 2011

கோ - இது அடுத்த நெக்ஸ்டு



மூன்று நாளைக்கு முன்னாடி, Site’ல ஒரு போட்டோ எடுக்கனும். போட்டோ எடுக்க வேண்டிய இடம் ஒரு சந்துக்குல இருக்குரதால எப்படி எடுக்கலாம்’னு தடுமாறிக்கிட்டு இருக்கேன்,

தம்பி எதாவது உதவி வேணுமா? அப்டீன்னு உள்ளே இருந்து ஒரு குரல்...

அந்த சந்துல எவன்யா சிந்து பாடுரான்’னு பார்த்தா அன்று ஹாஸ்பிட்டல்ல என் பொறுமைய சோதிச்ச (ஆபிரிக்காவும் எயிட்சும்) அதே நேபாளி.

அடப்பாவி நீயா???? நான் ஆணியே புடுங்கல..’னு எஸ்கேப் ஆகலாம்’னு பார்த்தா விட்டானில்ல...

தம்பி.. கைல கேமரா இருக்கு... போட்டோ எடுக்கனுமா... நான் எடுத்துக் குடுக்குரேன்.. குடுங்க தம்பி...

வேணாம்’னே... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரேன்..

ச்சும்மா குடுங்க தம்பி.. இது என்ன பெரிய வேலையா???

அண்ணே!! உங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா’ண்ணே????

தம்பீ......!!!!!!!!
என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க... நான் இங்க்லீசுலதான் வீக். இதையெல்லம் சரியா செய்வேன். என்னைப் பார்த்து இப்படி கேட்டுட்டீங்களே’னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

சரி.. போட்டோ எடுத்துக் குடுங்க அண்ணே!!’னு கேமராவ குடுத்துட்டேன்.
எனக்கும் ஏண்டா இப்படி கேட்டோம்’னு ஆயிடுச்சு... ஒரு வயசுல மூத்த ஆளிடம் இப்படி கேட்டிருக்கக் கூடாது’னு என்னையே நான் திட்டிக் கொண்டிருந்தேன். 

போட்டோ எடுத்துவிட்டு, கேமராவை குடுத்ததும், நானும் குற்ற உணர்வுடனே வந்து ஆபீஸில் போட்டோவை பார்த்தால்........
குற்ற உணர்ச்சியெல்லாம் மறந்து மறுபடி கொலை வெறியாகிடுச்சு.....
அந்த போட்டோ இதுதாங்க..............





............................................






............................................







பயபுள்ள கேமராவ அடுத்த பக்கம் திருப்பி எடுத்திருக்கான்.  இனி இவன் சகவாசமே கூடாது’னு முடிவெடுத்து இருந்தேன். ஆனால் மறுபடியும் அவன் விளையாட்டைக் காட்டிவிட்டான். அந்த கொடூர, குரூர சம்பவம் அடுத்த பதிவில்....  கட்டாயம் இழகிய மனமோருக்கு கிடையாது..




2 comments:

  1. சலங்கை ஒலி போல ஆச்சோ...தொடருங்கள்....

    ReplyDelete