Thursday 3 May 2012

இந்தியாவை தாக்கிய சீனா.. காப்பாற்றிய இலங்கை



நம்ம நாட்டு மக்களுக்கு எந்த கடமை உணர்ச்சி இல்லாவிட்டாலும், நம்ம நாடு எந்த நாடு கூட சண்டை போடுதோ, அந்த நாட்டுக் காரன் கூட நாமும் சண்டை போடனும், அவன் எது செஞ்சாலும் தப்பு கண்டு பிடிக்கனும், பேச்சு வாக்குல அவன் கால வாரனும்`னு ஒரு கடமை உணர்ச்சி மட்டும் எப்பவுமே இருக்கும்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ்`னு தன் பக்கத்து நாடுகளுடன் எப்பவுமே பிரச்சனைதான். இலங்கையுடன் நல்லாயிருக்கு. அதுவும் நிறைய பேருக்கு பிடிக்குறதில்ல.. எப்படா இரண்டு நாட்டையும் மூட்டி விடலாம்`னு இருக்கிறாங்க. சரி..... மொக்கை போடுர நம்மளுக்கு எதுக்கு அரசியல்... நாம பதிவுக்கு போகலாம்..

நான் புதிய கம்பனில சேர்ந்த சமயம், ஒரு நாள் மாலை வேலை முடிந்து, நான் தங்கியிருக்கும் ஏரியா சுத்தி பாத்துட்டு அப்படியே Laundry Roomக்கு வர்ரேன். அங்க ஒரு சீனாக் காரன் தன் உடைகளை கழுவிக்கிட்டு இருக்கான். பக்கத்துல ஒரு ஹிந்திக் காரன் செவ்வனே`னு காத்துக் கிட்டு இருக்கான்.

என்னைப் பார்த்ததும் ஹிந்திக் காரனுக்கு என்னாசு`னு தெரியல, சைனாக் காரனிடம் போய், ’’யோவ்!!!! எவ்ளோ நேரம்யா நீயே கழுவிக்கிட்டு இருப்பே!!! நாம வேடிக்கை பாத்துகிட்டே இருக்கிறது”னு சொல்லி Washing machine`ல இருந்த உடைகளை வெளியே போட ஆரம்பிச்சுட்டான்.



கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா பாத்துக் கிட்டு இருந்த சீனாக் காரன் ஓங்கி விட்டான் பாருங்க ஒரு உதை. வட இந்தியாக் காரன் தெற்குல போய் விழுந்தான். அதோடு விட்டிருக்கலாம். ஓடிப் போய் அவன் மேல ஏறி கும்மு கும்மு`னு கும்ம ஆரம்பிச்சுட்டான்.

நானும் இப்போ நிறுத்துவான், இப்போ நிறுத்துவான்னு பாத்து கிட்டே இருக்கேன். அவனும் கும்மி கிட்டே இருக்கான். இதுக்கு மேலயும் பொறுக்கு முடியாது`னு ”டேய்ய்ய்!! நிறுத்துடா`னு சைனா காரன அள்ளி பக்கத்துல தள்ளி விட்டேன். அவனும் என்னைப் பார்த்து சைனா பாஷைல
”ச்சுவாசிங்குவாஹ்... ஹசிஓரேஹ்... அமிங்காயுஆ........”அப்டீங்குறான்...
(இதை தமிழ் தெரிந்த சைனா காரன் பாத்துடாம இருக்கனும்)

அநேகமா ” அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்” அப்டீன்னு சைனா பாஷைல சொல்லியிருப்பான்`னு நினைக்கிறேன்.  ”இனிமே கை வச்சிருந்தா நடக்குறதே வேறு!!!!” அவனுக்கு புரியாத பாஷைல ஏசி விட்டு (அவனுக்கு புரிஞ்சா நம்மளையும் போட்டு கும்மிருவானுல்ல....) ஹிந்தி காரனை தூக்கி நிறுத்தினேன்.

நம்மளுக்கு மத்தியில் நடந்த ஒரு ச்சின்ன உறையாடல்....

அண்ணே!!!!! ஏன் அண்ணே!! உங்களுக்கு தேவையில்லாத வேலை. எதுக்கு அவன் கிட்ட போய் வம்பிழுத்தீங்க....

தம்பி.. நீங்க புதுசா கம்பனிக்கு வந்திருக்கீங்கல்ல.. அதுதான் ஒரு பில்ட்-அப் குடுக்கலாம்னு....

அண்ணே!! ஓவர் பில்ட் -அப் உடம்புக்கு ஆகாது`னு ஒரு பதிவே போட்டிருக்கேனே!! அதெல்லாம் படிக்கிறதில்லையா.....???

தம்பி!! நான் குடும்பஸ்தன்ப்பா..... அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது....


டேய்!!! இப்போ கூட, சாகப் பார்த்தவனைதானே காப்பாத்தி இருக்கேன். அதுக்கு மறுபடி பில்ட் அப் குடுக்குறே!!!

சாரி தம்பி.. இனிமே.. உங்க ஒரு பதிவு விடாம படிச்சிர்ரேன்ப்பா.....

படிச்சா மட்டும் போதாதுண்ணே..... காமெட்ஸ் போடனும்.....

அண்ணே!!! எனக்கு தமிழ் எழுதத் தெரியாதே!!! 

அதுக்கு எதுக்குய்யா புலம்புறே!!!! ”ஆஹா!!!! அசத்தல்... அருமை ... அபாரம்`னு நான் எழுதிக்குடுக்குறேன்.. நீ ஜஸ்டு காபி பேஸ்ட் பண்ணிடு அவ்வளவுதான்... அப்புறம் மறக்காம ஓட்டு போட்டுடுப்பா.....

என் உயிரைக் காப்பாத்தினவரு நீங்க.. ஒரு ஓட்டு இல்ல... 4,5 ஓட்டு போட்டுர்ரேண். கவலைய விடுங்க....

நோ!!!!!!!!!!!!!!!!! அப்படி மட்டும் பண்ணிடாதீங்க....

ஏன்!! தம்பி.... 4, 5 ஓட்டு கிடச்சா நல்லதுதானே!!!!!

அண்ணே!!! எனக்கு கிடைக்கிறதே 4,5 ஓட்டுதான். நீங்க பப்லிக்`ல இப்படி சொன்னீங்கனா, அந்த 4,5 ஓட்டு கூட கள்ள ஒட்டா இருக்குமோ`னு ஜனங்களுக்கு டவுட்டு வந்திடுமுல்ல......

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


5 comments:

  1. எங்க பார்த்தாலும் சிபி தலைப்பாவே இருக்கு.....

    ReplyDelete
  2. Where have you been bro...? Good to see you post....

    ReplyDelete
  3. ஸ்ஸப்பாஆ..... இந்தியா - சீனாவுக்கு இடையில எந்த சண்டையை இலங்கை வந்து தடுத்ததுன்னு ரொம்ப ஆர்வமா படித்தேன்.... தலைப்பு கொஞ்சம் இல்ல....... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஓவர்... கர்ர்ர்ர்ர்....

    ஓட்டு,கமன்ட்ஸ் போட இப்படியெல்லாம் ஆள் சேக்கிறீங்களா...?! :))

    ReplyDelete
  4. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ....நேரம் இருந்தால் வந்து பாருங்கள் .....
    http://blogintamil.blogspot.com/2013/01/2518.html

    ReplyDelete