Friday 6 May 2011

கண்டி நகரத்திலே சில நாட்கள்.....


நானும் நன்பர்களும் கண்டி நகரத்துல தங்கி படித்துக் கொண்டிருந்த காலம், அப்போ, பேச்சுலருக்கு தங்க வீடு கிடப்பதென்பது குதிரைக் கொம்பை விட அபூர்வமாய் இருக்க,   நாம் ரொம்ப அலைந்து திரிந்து ஏகப் பட்ட கெடு பிடிகளுக்கு மத்தியில் ஒரு வீட்டில்  தங்க இடம் கிடைத்தது.

ஒரு மாதம் இருந்திருப்போம், அவ்வேளைகர்ப்பமாக இருந்த நம்ம வீட்டு ஓனர் அம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அவர்களின் சொந்த பந்தங்களெல்லாம் வந்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தது.

இதை பார்த்த நம்ம நன்பன் க்ரேஸி, ”வாங்கடா!!! நாமளும் ஏதாச்சும் Gift வாங்கிட்டு போய், வாழ்த்து சொல்லி, நம்ம வீட்டு ஓனரிடம் நல்ல பேரு வாங்களாம். அப்போதான் கொஞ்ச நாளுக்கு நிம்மதியா இருக்கலாம்’னு சும்மா இருந்த எங்களையும் இழுத்துக் கொண்டு போக, அங்கே குழந்தையை சுற்றி உறவினர் கூட்டம்.



நாமளும் அசடு வழிய கூட்டத்துடன் போய் சேர, வீட்டு ஓனர், நம்மளையெல்லாம் சொந்த பந்தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வந்திருந்த ஒவ்வொருத்தரும் “குழந்தை அப்பா போலவே இருக்கு, அம்மா போலவே இருக்கு’னு சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருந்த வீட்டு ஓனரின் பையன் தன் பங்குக்கு ஏதாச்சும் சொல்லனுமே’னு  “அப்பா.. தம்பிப் பாப்பா, க்ரேஸி மாமாவை போலவே இருக்குள்ள’னு எல்லோர் முன்னாடியும் சொல்லி சனியனை தூக்கி நம்ம பனியனுக்குள்ள போட, வீட்டு ஓனர் அய்யா முகமும், க்ரேஸியின் போன போக்கை பார்க்கனுமே!!!!!! நாம, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு Escape.....

க்ரேஸியின் ஏழரை சனி நம்ம எல்லோருக்கும் சேர்த்து ஆப்பு வைக்க,  அன்றே தங்க வேறு அறை தேட வேண்டியாகிவிட்டது.

17 comments:

  1. ஐயோ ஐயோ என்ன கொடுமைக்கார பசலுங்கள்

    ReplyDelete
  2. பிக்காலி பசங்க...

    ReplyDelete
  3. சின்ன பசங்க பொய் சொல்லாதே..!
    நெருப்பில்லாம புகையாதே..!
    # கொளுத்தி போடுவோர் சங்கம்

    ReplyDelete
  4. நானும் நன்பர்களும் கண்டி நகரத்துல தங்கி படித்துக் கொண்டிருந்த காலம்//

    ஆரம்பமே பொய்யா கஷ்ட காலம்டா...

    ReplyDelete
  5. //சின்ன பசங்க பொய் சொல்லாதே..!
    நெருப்பில்லாம புகையாதே..!
    # கொளுத்தி போடுவோர் சங்கம்//
    இதுக்கு தான் வான்டடா கூப்பிட்டீங்களா? ஹா ஹா இன்னும் நீங்க வளரவே இல்ல faaique ;)

    //ஒரு மாதம் இருந்திருப்போம், அவ்வேளைகர்ப்பமாக இருந்த நம்ம வீட்டு ஓனர் அம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க//
    //அன்றே தங்க வேறு அறை தேட வேண்டியாகிவிட்டது//
    faaique எல்லாம் ஓகே தானே அப்புறம் என்ன குழப்பம்??? :D
    குட்டி பட் க்யுட் காமெடி :)

    ReplyDelete
  6. nice comedy but very tragedy

    ReplyDelete
  7. @ யாதவன் said...

    ///ஐயோ ஐயோ என்ன கொடுமைக்கார பசலுங்கள்////

    @மைந்தன் சிவா said...

    ///பிக்காலி பசங்க...///
    இது வெறும் Trailerதான்.

    ReplyDelete
  8. ///சின்ன பசங்க பொய் சொல்லாதே..!

    நாமளும் சின்ன பச்ங்கதான் சார்...

    ReplyDelete
  9. ///நானும் நன்பர்களும் கண்டி நகரத்துல தங்கி படித்துக் கொண்டிருந்த காலம். ஆரம்பமே பொய்யா கஷ்ட காலம்டா..////
    நாங்கெல்லாம் பிறப்புலயே ரொம்ப புத்திசாலினாலும், ஒரு டைம் பாஸுக்கு காலேஜ் போனாமுள்ள.....

    ReplyDelete
  10. ///ஹா ஹா இன்னும் நீங்க வளரவே இல்ல faaique////

    Yes.... இன்னும் ச்சின்ன பசங்கதானே!!!!

    ////faaique எல்லாம் ஓகே தானே அப்புறம் என்ன குழப்பம்???////

    ஓ.கே.... ஆனால் மொத்த குடும்பத்தின் முன்னாடியும் மானம் போயிடுச்சே!!!!!!

    ReplyDelete
  11. @ சி.பி.செந்தில்குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. @ Sathishkumar said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. யெண்டா இந்த மாதிரி பொய் சொல்ர.........

    ReplyDelete
  14. @ mohamed said...

    /// யெண்டா இந்த மாதிரி பொய் சொல்ர.........////

    நீயும்தான் பக்கதுல இருந்தியே!!!!!!

    ReplyDelete
  15. ஆகா மாட்டுப்பட்டுட்டாய்ங்களா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    ReplyDelete
  16. //யெண்டா இந்த மாதிரி பொய் சொல்ர//
    ohhh apo andha paiyan kuzhandhai faaique madhiri irukku nu sonnana :P
    yen faique indha madhiri poi solreenga

    ReplyDelete