Saturday 20 November 2010

நான்கு வேதங்களிலும் பெற்றுக்கொண்ட 12 விடயங்கள்..

கஹ்புல் அஹ்பார் (ரலி) அவர்கள் 4 வேதங்களையும் ஆராய்ந்து பெற்றுக்கொண்ட 12 விடயங்கள்..


1. ஆதமுடைய மகனே(மனிதர்களே)  சகல வஸ்துக்களும் உனக்காக படைத்துள்ளேன், உன்னை எனக்காக படைத்துள்ளேன்.

2. நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசி.

3. என் ஆட்சி இருக்கும் வரை என் அல்லாத யாரையும் பயப்படாதே.

4. மேல் வானத்திலிருந்து கீழ் பூமி வரை சகல வஸ்துக்களும் என்னை தேடுகிறது, நானோ உன்னை தேடுகிறேன். ஆனால் நீயோ என்னை விட்டு விரண்டோடுகிறாய்.

5. உன்னை ஒரு இந்திரிய துளியால் படைத்தேன், உனது ரிஸ்கின்(உணவு மற்றும் தேவைகள்) ஏற்பாட்டயும் நானே செய்துள்ளேன்.

6. எனது கஸானா(பொக்கிஷம்) முடிவடைவதில்லை, எனது கஸானா(பொக்கிஷம்) இறுக்கும் வரை உனது ரிஸ்க்(உணவு மற்றும் தேவைகள்)  தவறிப்போகும் என்று பயப்படாதே.

7. என்னிடம் நாளைக்குறிய ரிஸ்க்கை(உணவு மற்றும் தேவைகள்) இன்றே கேட்காதே, ஏனெனில் நாளைய அமலை(நற்செயல்கள்) இன்றே உன்னிடம் நான் கேட்பதில்லை.

8. நீ எனது விதியை பொருந்திக்கொண்டால் உனது மனதுக்கு நான் நிம்மதியை அளிப்பேன், எனது விதியை பொருந்திக்கொள்ளாவிட்டால் உலகை உன் மீது ஏவி விடுவேன், அது மலையில் காட்டு விலங்குகள் திரிவதை போல் திரிவாய், எனினும் உனக்கு நான் விதித்ததை தவிர வேறெதையும் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

9. உனக்காக என் மீது கோபப்படாதே மாறாக எனக்காக உன் மீது கோபப்படு.

10. என் அல்லாதவர்களை நெருங்க முயலாதே, நான் உனக்கு அருகில் இருக்கிறேன். நீ எப்போது என்னை தேடினாலும் என்னை அடைந்துகொள்வாய்.

11. நீ சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை தாண்டி உனது இரு கால்களையும் சுவர்க்கத்தில் வைக்கும் வரை எனது வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்து விடாதே.

12. எனது விதியை பொருந்திக்கொள்ளாமலும், எனது வேதனையை சகித்துக்கொள்ளாமலும் எனது உபகாரங்களுக்கு நன்றி செலுத்தாமலும் இருப்பவன் எனது வானத்தின் கீழ் இருந்து வெளியாகி வேரொறு இறைவனை தேடிக்கொள்ளட்டும்.

குறிப்பு:-
மேற்கூறப்பட்ட இந்த ஸஹாபி(முஹம்மது நபியின் தோழர்)  இந்த 12 விடயங்களையும் ஒரு நாளைக்கு 3 தடவை வாசித்து விட்டு அவருடைய அலுவல்களுக்கு செல்வார்.

11 comments:

  1. //2. நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசி.//

    இது நல்லா இருக்குங்க ..!!

    ReplyDelete
  2. உனக்காக என் மீது கோபப்படாதே மாறாக எனக்காக உன் மீது கோபப்படு.

    ReplyDelete
  3. ப.செல்வக்குமார் @
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. அனைவருக்கும் பொதுவான விசயங்கள்........ பகிர்வுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  5. @ ஜீவன்பென்னி..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


    www.ellameytamil.com

    ReplyDelete
  7. பொதுவான விசயங்கள்........ பகிர்வுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  8. நல்ல ஆராய்ச்சி

    ReplyDelete
  9. @ வெறும்பய...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. வழமைபோல் சுப்பர்

    ReplyDelete
  11. @ யாதவன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete