Tuesday 18 November 2014

நட்டு கலண்டிடுச்சே நாட்டு வைத்தியரே!!!

நாட்டு வைத்தியர்கள்... இவரிடம் போகாதவர்கள் நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.(இவங்க ஃப்ரீயா எதாவது குடுப்பாங்களா???) படித்தவர்களில்லை. அவர்களின் மருத்துவத்தை புத்தகத்தில் படிக்கவும் முடியாது.(உனக்கு அ,ஆ வே படிக்க முடியாது, அப்புறம் எங்கடா புத்தகம் படிக்கிறது)

உடைவு, முறிவு என்றால் ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் ரொம்ப அறிது.(ஏன்??? ஆங்கிலம் தெரியாதுங்குறதாலா??) வைத்தியசாலைகளில் காலை வெட்ட வேண்டுமென்று சொன்னவர்களின் காலை கூட சரி செய்பவர்கள் இந்த நாட்டு வைத்தியர்கள். இந்தப் பதிவு நாட்டு வைத்தியர்களை பற்றியதல்ல. நாட்டு வைத்தியரிடம் சென்ற நம் கதை..

க்ரேஸி கிட்ட இருந்து ஒரு Call.(நீ மிஸ்டு கால் மட்டும்தானே அடிப்பே!!) அதை call’னு சொல்ரதவிட அலறல்’னு சொல்லலாம்.(போன்ல சவுண்ட குறைடா..) ஏதோ மாங்கா மரத்துல இருந்து விழுந்துட்டானாம். யார் வீட்டு மரம்னு கேக்க கூடாது!!! ஏன்னா அது க்ரேஸிக்கே தெரியாம இருக்கும்!!!!! முளங்காலில் பயங்கர வலி.

க்ரேஸிக்கு நல்லது நடந்தா ட்ரீட் குடுப்பானோ இல்லையோ,(நீ குடுக்க மாட்டே!!) கெட்டது நடந்தா நம்ம அதன் மொத்த வலியையும் அவன விட நாமதான் ஃபீல் பண்ணனும். இப்போ மட்டும் விட்ருவானா???

பக்கத்தூர்ல உள்ள நாட்டு வைத்தியர் கிட்ட போகலாம்’னு சொன்னா, முடியாது, அவன் சரியில்ல, 60கி.மி தாண்டி ஒருத்தர் இருக்காரு. ரொம்ப பிரபலமான ஆளு. அவர்கிட்டயே போகலாம்னு ஒத்த கால்’ல நின்னான். பாவம் அவனுக்கிருந்ததே அந்த ஒத்த காலுதான்.

மாலை 6.00 மணிக்கே வைத்தியரிடம் போய் சேர்ந்தாச்சு. அங்க போனா 2 வரிசைல கூட்டம் இருக்கு. நாமளும் ஒரு பக்கமாய் போய் உக்காந்து கொள்ள நமக்கு எதிர்ப்பக்கம் இருந்த வரிசை நோயாளிகள் மளமளவென முடிவதும் புதிய நோயாளிகள் வந்து சேர்வதுமாக இருக்க, நம்ம வரிசை மட்டும் அப்படியே அசையாமல் இருந்தது.(முதலாவது இருந்தவன் தூங்கிட்டானா’னு பாருய்யா...)

டேய்!!! போய் முன்னாடி வரிசைல அமராம்டா.’னு க்ரேஸிகிட்ட கேட்டா, “அந்தப் பக்கம் நாட்டு வைத்தியரோட மகன் வைத்தியம் பார்ப்பான். அவன் சின்னப் பையன், நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்.(அவன்கிட்ட அக்கவுண்ட் வச்சிருப்பானோ??) கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்ல, அப்பா வைத்தியர்கிட்டயே வைத்தியம் பார்க்கலாம்’னு சொல்லிட்டான்.

உள்ளே வைத்தியர்ர ரூம்ல இருந்து அய்யோ!! அம்மா... காப்பாத்துங்க’னு சவுண்டு வந்து பீதிய கிளப்பியதே தவிர ஆளுங்க வர்ர மாதிரி தெரியல. ரெண்டு மணித்தியாலத்துக்கு பின்னாடி ஒருவாறு ஒருத்தன் பெரிய கட்டோடு வெளிய வந்தான். அப்புறம் அடுத்தவன் போனான், அவன் எத்தன மணித்தியாலம்னே தெரியல.... மொத்ததுல விடிஞ்சிடுச்சு...

மச்சி.. இந்த வைத்தியர்களுக்கு வெற்றிலையில் நடுவில் பணத்தை வைத்து குடுக்கனும். எவ்ளோ குடுத்தாலும் வாங்கிப்பானுங்க.. நாம எவ்ளோ குடுக்கலாம்??

ஒரு.... 500/- குடு. போதும்ல...

டேய்!!! 500/- எப்பிடிடா போதுமாகும். நான் 1500/- குடுக்க போரேன். இவங்கெல்லாம் நம் நாட்டின் சொத்து’டா...

ஷப்பா... நீ கொஞ்சும் பொத்துடா....

ஒருவாறு நம்ம நேரம் வந்ததும், உள்ளே போய், வெற்றிலையை குடுத்துவிட்டு க்ரெஸியை உக்காரவைக்க, க்ரேஸி தனக்கு நடந்ததை வைத்தியரிடம் சொல்லிக் கொண்டே தன் காயத்தைக் காட்ட முயற்சித்தவனின் முழியே சரியில்ல.

கீழே குனிந்து தடமாறிக் கொண்டிருந்த க்ரேஸியிடம் என்னடா’னு கேக்க ,நாதாரி க்ரேஸி சொன்ன வார்த்த...

......



......



......

“மச்சி.. ஜீன்ஸ் டைட்டா இருக்குடா முழங்கால் வரை தூக்க முடியலடா...

அடப்பாவி க்ரேஸி. @$^$^%@$^@%$$@$^%$%#@$# வழமை மாதிரியே கவுத்துட்டியேடா... இதுக்காடா இவ்ளோ நேரம் காத்துகிட்டு இருந்தோம்.

தம்பி.. ஒன்னும் பிரச்சனையில்ல.. டவுசர கலட்டுப்பா.. - இது நா. வைத்தியர்.

டவுசர கலட்டவா??? முடியாது.. நான் மானஸ்தன். நான் வேணும்னா நாளை வரட்டுமா???

மறுபடி நாளையா??? டேய்!!!!!