Wednesday 29 July 2015

Ebayனா இளிச்சவாயனுங்களா???



போன வாரம் கடைல ஒய்யாரமா உக்காந்துட்டு இருக்கேன், இந்த வாரம் எந்தப் பைத்தியத்துகிட்ட சிக்கனமோ, அந்த பைத்தியம் கஸ்டமர் ரூபத்துல வந்து முன்னுக்கு நின்னுச்சு...

அண்ணே!!! எனக்கு கட்டாயமா ஒரு பொருள் வாங்கணும்ணே... எவன கேட்ட்டாலும் ஈ பாய் கிட்ட வாங்கு... ஈ பாய் கிட்ட வாங்குங்குறானுங்க... யார்ணே அந்த ஈ பாய்?? அவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேனா???

டேய்!! அது e bay'டா..

ஓ... அப்டியா??. அந்தக் கடை கிழக்கு மாகாணத்துலயா இருக்கு???

ஏன் பக்கி?? எதுக்குடா அது கிழக்கு மாகாணத்துல இருக்கனும்???

Arugam Bay, China Bayணு எல்லா ஊரும் அங்கதானே இருக்கு???

கர்ர்..த்தூ... அதுக்கு நீ என்கேயுமே போக தேவல.. இங்கிருந்தே வாங்கலாம். புரிஞ்சுதா???

சரிண்ணே.. E-bay கடைய எந்த நேரம் திறப்பாங்க??? எப்போ மூடுவாங்க???

டேய்!! அது கடையில்லடா... ஆன்லைன் மார்க்கட்டிங்.. புரிஞ்சுதா??

அப்போ, எப்ப ஆன்லைன்ல இருப்பாங்க?? எப்போ எப்போ offlineல இருப்பாங்க???

அவ்வ்வ்.... வேற என்னவாவது கேளுடா .. முடியல...

அப்டின்னா?? நம்ம ஊர்ல உள்ள ஷேர் மார்க்கட் மாதிரியா???

கிர்ர்ர்... நம்ம ஊர்ல ஷேர் மார்க்கட்’டா??? அதெங்கடா இருக்கு??/  நம்மளுக்கே தெரியாம...

நம்ம சந்தைக்கு பின்னாடி உள்ள மூத்தர சந்துல இருக்கே ஒரு ஆபீஸ்.நெறைய பேரு இங்க்லீஸ் பேப்பர் படிச்ச்சிட்டு இருப்பாங்களே??

என்னது??? மூத்தர சந்துல ஷேர் மார்க்கட்டா????  கர்ர்ர்,,த்தூ... டேய், சூதாட்ட விடுதிடா நாதாரி...

அப்போ அந்த E-bay எங்கண்ணே இருக்கு??

தம்பி அது ஆன்லைன் மார்க்கட்டிங்’ப்பா... இன்டெர்னெட் மூலமா தேவையான பொருள ஆடர் பண்ணி க்ரெடிட் கார்ட் மூலமா பணம் குடுத்தா, அவங்க பொருள நம்ம வீட்டுக்கே அணுப்பி வச்சிடுவாங்க. ஆமா உன்கிட்ட க்ரெடிட் கார்ட் இருக்கா????

க்ரெடிட்’னா ஊரெல்லாம் இருக்குண்ணே.. க்ரெடிட் கார்ட்’னா இன்னும் இல்ல. அங்கயும் கடன் தருவாங்கனு தெரிஞ்சிருந்தா எப்பவோ வாங்கியிருப்பேன்...

கர்ர்ர்....(ச்சே இவனுக்கு காரித்துப்பி துப்பியே என் தொண்ட வத்திடுச்சு. இந்தப் பழக்கத்த இன்னையோட நிறுத்தனும் - மைண்ட் வாய்ஸ்)

Tuesday 14 July 2015

தலைவா - Time to ESCAPE

காலேஜ்ல,
ஒருவாறு கீழ் வகுப்புல இருந்து மேல் வகுப்புக்கு போய் சேர்ந்தாச்சு. மேல்வகுப்புக்கு வந்து பார்த்தா, நம்ம பழைய நண்பர்களில் டட்ஸனும், பாப்’ம் மட்டும்தான் இருக்கானுங்க. மத்தவனுங்க எல்லாம் புதிய பசங்க. க்ரேஸி, புள்ளி ராஜா வேற வகுப்பு.

மேல் வகுப்புக்கு வந்தா Prefect (மாணவர் தலைவர்) தேர்வு செய்வாங்க. நம்ம வகுப்புல டட்ஸனும், பாப்’ம் ஆல்ரெடி மாணவர் தலைவர், மத்தவுங்க எல்லானும் புதுசு, காலேஜ் மெனேஜ்மெண்ட்டுக்கு வேற வழியே இல்லாம நம்மளையும் மாணவர் தலைவனாக்கிட்டாங்க. நக்கலா சிரிக்காதீங்க... க்ரேஸிஐயோ, புள்ளி ராஜாவையோ மாணவர் தலைவராக்கல.. Note the Point...

நாம சும்மாவே உருவத்துல சிறிசு, அது போக திருட்டு முழி வேற கூடவே பொறந்தது. நாமெல்லாம் மா. தலைவர்னு அம்மா சத்தியம் பண்ணினாத்தான் நம்புவனுங்க. அதனால Senior Prefectஇடம் கெஞ்சி கூத்தாடி சின்ன வகுப்புக்கு என்னை நானே நியமித்துக் கொண்டாச்சு..

சும்மா சொல்லக் கூடாது, அந்த க்ளாஸ்ல ஒரு பத்து, பதினைஞ்சு பேரு நம்ம கிட்ட அடி வாங்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருந்தானுங்க. அப்புறம் என்ன?? இதுவர மா. தலைவர்களிடம் நாம் பட்ட அதேஅவஸ்தைய நம்ம கிட்ட அந்தப் பசங்க பட்டு மாஞ்சானுங்க....

நம்ம காலேஜ்ல முக்கியமான ஒரு சட்டம் இருக்கு, அதாவது டவுசர் போடாம வந்தா கூட உள்ள விட்ருவானுங்க. ஸ்கூல் பேட்ஜை சட்டைப் பைல தைக்காம வந்தா கேட்டைக் கூட தொட விடமாட்டானுங்க. பேட்ஜை நாலு பக்கமும் நல்ல முறைல தச்சிருக்கனும், ஆனா, சில பசங்க அவசரத்துல பேட்ஜை வைத்து பின்’னால குத்திட்டு வருவானுங்க. சில பேரு லைட்டா தச்சுட்டு வருவானுங்க. அத புடிங்கி அவனுங்க கைல குடுத்து, நாளை வரும் போது, சரியா தச்சுட்டு வர சொல்லி எச்சரிக்கனும்.நீங்க காரித் துப்பினாலும் பரவால ஒரு உண்மைய சொல்ரேன், மா. தலைவர் வேலைலயே எனக்கு புடிச்சது இந்த வேலதான்..

அடையாளப் படம்
பேட்ஜை பிடுங்கும் போது சில வேளை, பேட்ஜுடன் சேர்ந்து பாக்கட்டும் கைக்கு வந்துடும். அப்புறம் நம்ம உச்ச கட்ட அதிகாரத்த பிரயோகித்து அவனை அடக்க வேண்டி இருக்கும். சில வேளை, உச்ச கட்ட அதிகாரம்னு சொல்ரது வெள்ளைக் கொடியாகவோ, அதை விட கீழ்த்தரமாகவோ இருக்கும். அவ்வ்....விட்ரா விட்ரா நீ படாத அவமானமா?? பார்க்காத அசிங்கமா?? கேக்காத கெட்ட வார்த்தையா???

ஒரு நாள் டியூட்டில இருக்கேன், அம்மாஞ்சியா ஒருத்தன் வர்ரான். அவன் மூஞ்ச பாத்தா முசுப்புக்கே(அலுப்பு) மூஞ்சில மூனு குத்து குத்தலாம் போல இருக்கும். இவன வச்சு நாம ரவுடி ஆகிடலாம்னு அவன நல்லா நோட்டம் விட்டேன், நம்ம கிட்ட இருந்து அவ்ளோ ஈஸியா எஸ்கேப் ஆகலாமா?? அவனோட ஸ்கூல் பேட்ஜ் ரெண்டு பக்கம் தைக்காம இருக்குறது என் கண்ணுல பட்டிடுச்சு.

டேய்!!! இங்க வாடா????னு கூப்டதும் பம்மிகிட்டு வந்தான், என்ன நடக்க போகுதுனு எதிர் பார்த்திருப்பான் போலும், பேட்ஜை ஒழுங்கா தைக்கலல’னு சேர்ட்டை புடிச்சு அவன் பேட்ஜை இழுக்க, அவனும் என்னவோ சொல்ல முயல, அவன் பேட்ஜ் என் கைல வந்தது...

பேட்ஜ் மட்டும் வந்திருந்தா பரவால...பாக்கெட்டும்.....


பாக்கெட் மட்டும் வந்திருந்தாலும் கூட பரவால.....அவ்வ்வ்வ்

அவனோட ஷேர்ட்டும் சேர்ந்து கிழிந்து என் கைக்கு வந்துடுச்சு....

சனியன் அன்னக்கி பனியனும் போட்டில்ல.. நெஞ்சுப் பகுதி அப்டியே வெளியே தெரிய, உடனே அழ ஆரம்பிச்சுட்டான்.

சாரிடா தம்பி.. தவறுதலா ஆச்சுடா...

போங்கண்ணே!!! இது எங்க மூத்த அண்ணன் போட்ட சேர்ட்டு.. கிழிச்சுட்டீங்களே!!!

அடப்பாவி நான் புதுசோ’னு நெனச்சு பயந்துட்டேண்டா.... ஆமா, நீ உன் குடும்பத்துல எத்தனையாவது ஆளு???

7வது...

அடப்பாவி. கவர்மெண்ட்  ஃப்ரீயா சட்டைப் புடவை குடுக்க, நீ ஒரே சேர்ட்ட ஏழு தலைமுறையாவா உடுக்குறே???? மவனே இந்த சேர்ட்டோட சேர்த்து, உன்னையும் மியூசியத்துல வச்சிருவேன் பாரு...ஓட்ரா.....

வெளிய வா... என் ஆறு அண்ணனையும் கூட்டி வர்ரேன்.

அடுத்த மூனு நாளா நான் காய்ச்சல் காரணமா காலேஜ் போகல, நான் ஏன் இத இங்க சொல்ரேண்ணா, நான் அவன் அண்ணன்ங்களுக்கு பயந்து காலேஜ் போகலனு நீங்க யாரும் தப்பா நெனக்க கூடாது பாருங்க...

Tuesday 7 July 2015

பெட்ரோல்மக்ஸ் லைட்டேத்தான் வேணுமா???

சம்பவம் 1:
அன்று கடையை மூடி விட்டு வீடு செல்ல கொஞ்சம் லேட் ஆயிச்சு. பொதுவா இருட்ட முன்னாடியே கிளம்பிடுவேன், அன்று அது மிஸ்ஸிங். வளைவுகள் நிறைந்த வீதி, அதனால் ஒரு பைக்கின் பின்னால் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வளைவுகள் முடிந்து கொஞ்சம் நேரான பாதை வர பைக்கை முந்திடலாம்னு எக்ஸ்லேட்டரை முறுக்க, திடீர்னு முன்னாடி வந்து நின்றது ஒரு சைக்கிள்.

ப்ரேக் பிடிக்க நினைக்கவும் முடியல, கொஞ்சம் பாதையின் வெளியே நான் திருப்ப, நேருக்கு நேர் மோதாமல் சைக்கிளோட Handle என் கையை பதம் பார்க்க என் சைட் கண்ணாடி சைக்கிள்காரனுடைய கையை பதம் பார்க்க, வெவ்வேறு திசையில் போய் விழுந்தோம். பைக் விழாமலிருக்க முயற்ச்சி செய்ததில் எனது காழும் கையும் தசை பிடிப்புக்காளாகி விட்டது.

விழுந்தவுடன் பைக்கை தூக்கவுமில்லை, உடனே சைக்கிள்காரனிடம் ஓடிச் செல்ல அவனும் மெதுவாக எழுந்துவிட்டான். ஒரு 70 வயது மதிக்கத் தக்க ஒரு கிழவன், நல்லா குடிச்சிருந்தான். “என் மேலஎந்தத் தப்பும் இல்ல, நான் என் பக்கத்துலதான் வந்தேன்”னு கத்திகிட்டு இருந்தான். அதற்குள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.

அவனுக்கு கையில் கொஞ்சம் ரத்தம் கசிந்திருந்தது, அவனை அதை பார்க்க விடவில்லை, சைக்கிளுக்கு எந்தக் காயமும் இல்லை. பொதுவா இப்படி விபத்துக்கள் நடந்தால் நம்மளிடம் பணம் அறுத்து விடுவார்கள். சிங்கள ஊர், அடிபட்டவனும் சிங்கள ஆளு, கொஞ்சம் விட்டா நம்மள மேய்ஞ்சிடுவானுங்க,அதனால யாரையும் வாய் திறக்க விடல, நானே வலவலனு பேசி, அந்தக் கிழவன யோசிக்கவே விடாம, அவசரமாக அந்த இடத்திலிருந்து அனுப்பிவிட்டு எஸ்கேப் ஆனேன்.

அந்தக் கிழவன் சைக்கிளில் எதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் அந்த விபத்து தடுக்கப் பட்டிருக்கும். அட்லீஸ்ட்,ஒரு Reflection Lightஆவது சைக்கிளில் வைத்திருக்க வேண்டும். டுபாயில் சைக்கிளில் போவோர் கட்டாயமாக Reflection kit, Helmet அணிந்திருக்க வேண்டும். இது போன்ற சட்டங்கள் நம் நாட்டிலும் வேண்டும்.

சம்பவம் 2:
இந்த அம்பவம் முடிந்து ஒரு வாரம் இருக்கும், பக்கத்து டவுனுக்கு போகலாம்னு பேமிலியுடன் ஆட்டோவில் கிளம்பினேன். பெட்ரோல் ஷெட்’டில் பெட்ரோல் அடித்துவிட்டு, ரோட்டுக்கு ஆட்டோவை போட பார்க்கும் போது, திடீர்ன்னு ஒரு லைட் இல்லாத சைக்கிள்காரன் முன்னாடி வந்து சேர, மனைவி போட்ட சப்தத்தில் ஒரு ரத்தக் களரி ஜஸ்ட்டு மிஸ்ஸு. எனக்கு செம டோஸ் கிடச்சதுனு நான் சொல்லாமலேஉங்களுக்கு தெரிந்திருக்கும்.
அப்படியே ஒரு மூனு கிலோ மீட்டர் போயிருப்போம், புதுசா போட்ட நல்ல கருப்பு ரோடு, அதுல ஏதோ வெளிச்சம் அசையுர மாதிரி தெரிந்தது. பக்கத்துல போகும் போதுதான் பார்த்தேன், கருப்பு ரோட்டுல கருப்பு ட்ரெஸ்ல அதே கலருல ஒரு கிழவி விழுந்து கிடக்குறா. நான் ப்ரேக் அடிச்சு வண்டிய சமாளிக்கிறதுக்குள்ள, மெதுவா எழுந்து ஓரமாயிடுச்சு அந்தக் கிழவி,

கையில் வெளிச்சம் இருந்ததால் அன்று ஒரு விபத்து தடுக்கப் பட்டது, இல்லாவிட்டால் கிழவி என் ஆட்டோவுக்கடியில் “ஆச்சி65” ஆயிருக்கும். ஓ மை காட்!!!

சம்பவம் 3:
இரண்டாவது சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும், ஒரு நாள் இரவு பள்ளிக்கு ஆட்டோல போய் தொழுதுட்டு வெளிய வந்து பாக்குறேன், ஒரு நாய் ஆட்டோ சீட்டுல புதுசா போட்ட சீட் கவர்ல ஒய்யாரமா படுத்துட்டு இருக்கு. ஆட்டோக்குள்ள இருந்ததால நாய அடிக்க முடியல. புது சீட் கவர கழுவ சோம்பரத்துல வீசிட்டேன்.

அடுத்த நாள் இரவு மஸ்ஜித்திலிருந்து வெளியே வர்ரேன், அதே நாய் ரோட்டுப் பக்கமா இருளுக்குள்ள ஒட்டிட்டு இருக்கு, வந்த கோவத்துல கைல கெடச்ச செங்கள் பாதிய ஒரே வீசு. இருட்டிலிருந்து “அய்யோ... அம்மா”னு கதறல் சத்தம்.

ஆஹா.. தமிழ் தெரிஞ்ச நாயா இருக்குமோனு டார்ச்சை எடுத்துட்டு போய் பார்த்தா, வெள்ளையும் சொல்லையுமா நம்ம ஊரு கல்யாண ப்ரோக்கர் காலில் ரத்த காயத்தோடு ரோட்டில் விழுந்து கிடக்க, பக்கத்துல நான் வீசின செங்கல் பாதி.

சாரிண்ணே!! நாய்க்கு அடிச்சது.... தவறுதலா...

என்ன பாத்தா நாய் மாதிரியாடா இருக்கு.....


இல்லண்ணே!!  நாய பாத்தாதான் உங்கள மாதிரி இருக்கு(ஆனா ஊருக்குள்ள அத விட கேவலமாத்தான் உங்கள பாக்குராங்க....- மைண்ட் வாய்ஸ்)

டேய்!! எனக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியலயா????

அது உங்க தொழில் மகிமைண்ணே!!!!

டேய்!!!!

அங்கயும் கூட்டம் கூட, கல்யாண ப்ரோக்கர் மேல ஊர் மக்களுக்கு இருந்த கடுப்புல என் தலை தப்பியது. இருட்டில் வராமல் ஏதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் கல்யாண ப்ரோக்கருக்கு செங்கல் பாதியால் அடி வாங்கியிருக்க வேண்டியதில்லை.

Wednesday 1 July 2015

என் உச்சி மண்டைல....



போன வெள்ளிக் கிழமை,
பகல் வேளை,
மஸ்ஜித்துக்கு போகலாம்னு அவசரமா கடைய மூடிட்டு இருக்கேன் கடைசி கதவை போடும் நேரம் பார்த்து, பக்கத்து ஊர்ல சலூன் நடத்துர நம்ம உலக மகா கஸ்டமர் ஒருத்தன் வந்துட்டான்..

அண்ணே!!! அவசரமா கத்தரி (Scissors) ஒன்னு குடுங்கண்ணே!!

தம்பி, தம்பி கடைய மூடிட்டு இருக்கேன், கோவிச்சுக்காம வேற எங்கயாவது போய் வாங்கிக்கோப்பா..

அதெல்லாம் முடியாதுண்ணே!!! சீக்கிரமா குடுங்க..ரொம்ப அவசரம்..

முடியா..

அண்ணே, பேசிட்டு இருக்குர நேரம் குடுத்திருக்கலாம்ல.. சீக்கிரம்னே....

தொல்ல தாங்க முடியாம போய் கத்தரியை எ டுக்க வேறெதையோ எடுத்தேன். அத கைல வாங்கிட்டு ஓட பார்த்தான்.

டேய்!! அது பென்சில் பாக்ஸ்’டா..அத குடு.. இதோ இருக்கு நீ கேட்டது...

இதோ பணம் இருக்கு...குடு குடு குடு குடு...

டேய்!!! எதுக்கு இப்போ குடுகுடுப்பை காரம் மாதிரி அடிக்குரே.. கொஞ்சம் பொறுடா.. பேக்ல போட வேணாமா....???

போக்;லாம் தேவல. நான் என் பாக்கட்லயே வச்சுக்குறேன். வரட்டா...

ஆமா.. மீதி பணம் வேணாமா?? அத நான் என் பாக்கட்ல வச்சுக்கவா....

சீக்கிரம் குடுங்கண்ணே!!!! அய்யோ!!!! லேட் ஆவுதே!!!

இந்தா மீதி..போய் தொலை. . கத்தரிய டவுசர் பாக்கட்ல போட்டிருக்கே, எங்கயாவது, எதையாவது அறுத்துட போகுதுடா....

அட்வைஸ் பண்ர நேரமாணே இது??? சலூன்ல ஒருத்தன் பாதி முடி வெட்டின நிலமைல இருக்காண்ணே!!!

அடப்பாவி.. இத முதல்லயே சொல்ல வேணாமாடா???


அவன் போனதுமே கடைய சாத்திட்டு ஜும்மாவுக்கு போய்ட்டு, ஜும்மா தொழுகை முடிஞ்சு சாப்டு விட்டு, சுமாரா ரெண்டரை மணித்தியாலத்துக்கு பிறகு கடைக்கு வர்ரேன், கத்தரி வாங்கின பார்ட்டி கடை வாசல்ல குந்திகிட்டு இருக்கான்.

டேய்!! அதுக்குள்ள கடைக்கு போய் வந்துட்டியா???

அழும் தொனியில்...
நான் எங்கண்ணா கடைக்குப் போனேன்???  அவசரத்துல என்னோட பைக் சாவிய உங்க கடைக்குள்ள வச்சுட்டேண்ணே!!!  அவ்வ்.....

கிர்ர்ர்ர்........அப்போ, முடி வெட்டிட்டு பாதிலயே விட்டுட்டு வந்தியே, அந்தாளோட நிலைமை என்னாடா???

யாருக்குண்ணே தெரியும்??? இனிமே நான் சலூன் பக்கம் போனாத்தானே!!!!