Thursday 30 October 2014

மதீனாவில் வேலையா???




ரொம்ப நாளைக்குப் பிறகு எதேச்சையாக தெரிந்த ஒரு பையனைச் சந்திக்க நேர்ந்தது.(எதேச்சையாக சந்திக்காம உன் கிட்டயெல்லாம் Appoinmentவாங்கிட்டா சந்திப்பாங்க??? )கொஞ்ச நேரந்தான் பேசியிருப்பேன் (விட்டா போதும்னு ஓடியிருப்பானே!!!).அதுக்குள்ள கிருக்கன் ஆக்கிட்டான்..(நீ முன்னாடியே அப்படித்தானே!!!)

டேய் தம்பி..இப்போ எங்கடா இருக்கே..!! ஆளையே காணல... (உன்ன கண்டதும் எங்கையாவது பதுங்கியிருப்பான்.. அவன் கெட்ட நேரம் இன்னைக்கு மாட்டிகிட்டான்...)

அண்ணே!!  நான் இப்போ மதீனால இருக்கேண்ணே!!!

வாவ்!!! சூப்பர்’டா தம்பி.. கேக்கவே சந்தோசமா இருக்கு... (கொஞ்சம் பொறு... ஏதாவது குடுப்பான்யா.. அலையாத...) ஆமா... மதீனால எங்க இருக்கே?? மஸ்ஜிதுன் நபவி’க்கு பக்கதுலயா???

இல்லண்ணே!! Harrison Jones ரோட்டுக்கு பக்கத்துல...

என்னது??? மதீனால Harrison Jones ரோட்டா??? டேய்!! எந்த மதீனாலடா இருக்கே!!!

டவுன்ல உள்ள மதீனா பேக் ஹவுஸ்’லண்ணே!!!

கிர்ர்... (அட முள்ளமாறி நாயே!!! இத முதல்லயே சொல்ல வேண்டியதுதானே!!!)

Thursday 23 October 2014

கத்தி - மறுபக்கம்



ஒரு நாள் க்ரேஸி வீட்டுப் பக்கம் போய்க் கொண்டிருக்கிரேன்  நம்ம நண்பன் க்ரேஸி கைல பெரிய கட்டோடு ரொம்ப ஃபீல் பண்ணியவாரு வந்துகிட்டு இருக்கான்.

மச்சி... என்னாச்சுடா??? கைல இவ்ளோ பெரிய கட்டு...

எல்லாம் கத்தியால வந்த வினைடா....

டேய்!!! நீ சுறாவையே பாத்த சூர மொக்க சுல்தானாச்சே!!! வெறும் கத்தி ட்ரைலருக்கே இப்படியா?? கத்தி எடுத்தவனுக்கு மட்டுமில்ல.. கத்தி பாத்தவனுக்கும் கத்தியாலதாண்டா சாவு (நம்ம க்ரூப்ல க்ரேஸி (ஒரே) ஒரு விஜய் ரசிகன்)

#$#%$@@$%$#@$(%(&^*# 4 டேய்!!! இது அந்த கத்தி இல்லடா.... நேற்று புதுசா வாங்கின கத்திடா.... முதல் முதலா ஒரு Appleஐ வெட்டலாம்னு பார்த்தேன்... வெட்டவே இல்ல....

அப்புறம்....

பின்னால ஓங்கி ஒரு அடி அடித்தேன்... பொலந்துடுச்சி.....

Apple'a???

இல்ல... என் கை.... அப்போதான் பார்த்தேன், அவ்வளவு நேரமும் கத்திய தலை கீழா புடிச்சுட்டு வெட்டியிருக்கேண்டா..

கர்ர்ர்.... தூ.......

Wednesday 15 October 2014

கைது செய்யப் பட்ட கருணா....

2005ம் ஆண்டாக இருக்க வேண்டும். Mobile Phoneகள் அனைவரினதும் கைகளில் தவழ ஆரம்பித்திருந்த நேரம். எப்படியோ நம்ம நண்பன் க்ரேஸி வெளிநாட்டில் இருக்கும் அண்ணனின் காலில் கையில் விழுந்து ஒரு போனை வாங்கிவிட்டான். எதுக்கு அவ்வளவு அசிங்கப் பட்டு ஒரு போன் வாங்கனும்????? அப்பொழுதெல்லாம், போன் இருந்தா பொண்ணுக்களை ஈஸியாக மடக்காலாம்னு நம்பிக்கிட்டிருந்த காலம்.

போன் எடுத்ததிலிருந்து க்ரேஸியோட இம்ச தாங்க முடியல. எதோ போன் இருக்குறவன் மட்டும்தான் உலகத்துலயே வாழ தகுதியானனுங்க’ங்குற மாதிரி...... கைல Watch கட்டியிருந்தாலும் போன்லதான் டைம் பார்ப்பாராம்....

ஒரு நாள்.... க்ரேஸி என்னிடம்......

மச்சி... இன்னைக்கு செய்தி கேட்டியா....?

இல்ல மச்சி...  நீ எப்படா செய்தியெல்லாம் கேக்க ஆரம்பிச்ச????

போன் வாங்கினதிலிருந்து உலகமே கைக்குள்ள வந்த மாதிரிடா.... எல்லா செய்தியும் போன்லயே சொல்லிர்ரானுங்க....

போன்ல செய்தி சொல்ரானுங்களா??? டேய்!!! சும்மா பொய் சொல்லாதே.....!!!

கருணா அம்மனை கைது பண்ணிட்டாங்க தெரியுமா????

கருணா அம்மன் புலிகளுடன் இருந்து பிரிந்திருந்த கால கட்டம் அது... அபோதைய நிலவரப்படி க்ரேஸி சொன்னது ஒரு சூடான தகவலே!!!

எப்படா?? எப்படிடா???? உனக்கெப்படிடா தெரியும்????

இதுக்குதாண்டா போன் வச்சிருக்கணும்டு சொல்ரது.. இப்பொழுதான் ஃப்ரண்டு ஒருத்தனுக்கு Call பண்ணும் போது, போனை கட் பண்ணிட்டு “கருணாவை (அம்மன்) பஸ்’சுக்குள்ள அமர்த்தி பிடிச்சுருக்கதா” சிங்களத்துல சொன்னாங்க...

அடப்பாவி... உனக்கு சிங்களமே தெரியாதே!!! எப்படிடா சொன்னாங்க??

“கருணாகர பசுவ அமதன்ன”னு சொன்னாங்க... வேணும்னா அதே ஃப்ரண்டுக்கு மறுபடி Call பண்ணி காட்டவா??? நீயே கேக்குறியா???

அடப்பாவி க்ரேஸி.....   #%$##^#&&#%$@$#%^&@#*@#&@#@%^@#
” கருணாகர பசுவ அமதன்ன”னு சொன்னா கருணாவ பஸ்ஸுக்குள்ள அமத்திட்டானுங்க’னு அர்த்தமில்ல,(Call போரதுல ஏதோ ப்ராப்ளம் இருக்கு) தயவு செய்து பின்னர் அழுத்தவும்’னு அர்த்தம்டா.....

கிர்ர்ர்ர்ர்ர்............

Wednesday 8 October 2014

நாரோடு சேர்ந்த பூவும் நாறும்...


வாசனைத் திரவியங்களுக்கு அரேபிய நாடுகளில் எப்போதும் ஒரு தனி மதிப்புண்டு. அரேபிய நாட்டு வாசனைத் திரவியங்களும் பெயர் போனவை.

ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, வாசனைத் திரவியம் பற்றியதும் அல்ல, அரேபிய நாடுகளைப் பற்றியும் அல்ல.... நாம் பார்க்கப் போவது சாக்கடையை பற்றி.. அவன்தான் நாய் சந்தியிலிந்து வரும் நம் நண்பன் சாக்கட சாமில்.

இவனை பற்றிய முன்னைய பதிவுகள்

1. கொழும்பிலே ஒரு கொலைக் களம்

2. டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி

டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’ன்ற பதிவில் சாக்கட சாமில் டுபாய்க்கு வந்ததை பார்த்தோம். இனிமே டுபாய்’ல இவன் நம்மள பாடா படுத்தினத பாக்கலாம்.

ஒரு வெள்ளிக் கிழமை, லீவு நாளு, நல்ல குளிரு.. போர்த்திகிட்டு தூங்கலாம்னு பார்த்தா, நம்ம சாக்கட ரூமுக்கு வந்துட்டான். (இவனுக்கு வழி சொன்னவன் மட்டும் என் கைல கெடச்சான்????........ மைண்ட் வாய்ஸ்) 

மச்சி... நான் அத்தர் ஒன்னு வாங்கனும்டா.....

சரி போய் வாங்கு.....

அதெப்படி.... நீயும் வா... எனக்கு இடம் தெரியாதே.....

இவன் அத்தர் பூசினா, வாசம் அடிக்காவிட்டாலும் பரவால... இவன் கிட்ட அடிக்கிர நாற்றமாவது குறையுமே’னு நெனச்சி, நானும் போக ரெடியானேன்.

போய் பஸ்ஸில் ஏறியதும் வழமை போல, சாக்கட சாமில்,

மச்சி.. என் பர்ஸ உன் ரூம்ல வச்சிட்டு வந்துட்டேடா.....

பிரச்சனையே அல்ல... நான் கொண்டுவந்திருக்கேன்..

இல்ல மச்சான் நான் சொல்ரது என் பர்ஸுடா...

நான் கொண்டுவந்திருக்கரதும் உன் பர்ஸைத்தாண்டா........ (யார் கிட்ட.... எத்தனை முறைதான் நாமளும் ஏமார்ரது...- மைண்ட் வாய்ஸ்)

ஒருவாறு கடை வீதிக்குவந்தாச்சு,
ஒவ்வொரு கடையிலும் எத்தனை அத்தர் (Perfume) இருக்கோ,அத்தனையும் பூசிப் பார்த்தாச்சு... சாக்கடைக்கு எதுவுமே செட் ஆகல....

பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்’னு சொல்வாங்க... ஆனா... நாறோட சேர்ந்த பூவும் நாறும்’னு சாக்கடயிடம் படித்துக் கொண்டேன்.

ஒரு கடைக்காரன் சொன்னான்.. “ டேய்.. பாத்ரூம்’ல கொமட் இருக்கு.. அதையும் போய் முகர்ந்து பாக்குரயா????”

வேறு வெரைட்டி இல்லையானு ஒரு கடையில் கேட்க, அவன் சொன்னான்.. “டேய்!! என் அக்குளை வேணும்னா முகர்ந்து பாக்குறியா???

எவன் எவ்வளவு கேவலமா திட்டினாலும் சாக்கட அசரவேயில்ல... ஒவ்வொரு கடையா போய் கொண்டிருந்தோம்..

இப்படி ஒரு கடையில் அத்தர்(Perfume) தேடிக் கொண்டிருக்கும் போது, சாக்கட சாமில் ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டு,

மச்சி, இங்க பார்ரா... சூப்பரா இருக்கு... இதுதாண்டா இவ்வளவு நாளா தேடியது... வாவ்.. என்ன ஒரு வாசம்...

எனக்கும் ஒரே சந்தோசம்... ஷப்பா... வீடு போய் சேரலாம்னு......

கடைக் காரரைப் பார்த்து, அய்யா... ஒன்னுக்கு மூனு பெட்டியா பார்சல் பண்ணிக் குடுங்கையா... இவன் இம்ச தாங்க முடியல...

சாக்கட சாமிலின் கையில் இருந்த பெட்டியை பார்த்த, கடை முதளாலியின் முகத்தில் பொறி பறந்தது.... அப்போதுதான் அவரு சொன்னாரு......

..................


..................


..................


..................



டேய்!!!! அது என்னோட சாப்பாட்டுப் பார்சல்’டா....