Monday 26 March 2012

கொழும்பிலே ஒரு கொலைக்களம்

Gall Face கடற் கரை

 நான் கொழும்பு தெஹிவலைல படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு நாள் என்னைப் பார்க்கவென, நம்ம ஆருயிர் நண்பன் க்ரேஸி கண்டியிலிருந்து, தெஹிவலை வந்துவிட்டான்.

வந்தவனை சும்மா வச்சிருக்கலாமா??? எங்கேயாவது கூட்டிப் போகனுமே!!! எங்க போகலாம்`னு யோசித்தபோது, தெஹிவல Zoo'க்கு போகலாமானு யோசித்துவிட்டு, நம்மளையும் தூக்கி கூண்டுல போட்டுவானுங்களோ`னு ஒரு பயம் இருப்பதால, அதை கை விட்டு விட்டு, Gall Face கடற் கரைக்கு போகலாம்`னு முடிவு பண்ணினோம்.

Gall Face கடற் கரை

நம்ம கூட பசங்கள்ளையே முக்கியமே இல்லாத ஒரு நபர்தான் “நாய் சந்தி”யிலிருந்து வர்ர “சாக்கட சாமில்”.  இவர் இருக்குறதால அந்த ஏரியாவுக்கு ”நாய் சந்தி”னு சொல்றாங்களா??? இல்ல.. நாய் சந்தி`னு பேர் இருக்குறதால இவன் அந்த ஏரியால போய் இருக்கானா?னு எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. நாம எங்காவது வெளியே கிளம்பும் போது, இவன் வர்ரதா கேள்விப்பட்டா, அப்படியே ஷாக் ஆகிடுவோம். ஏண்ணா, வெளில போகும் போது, எப்பவுமே மறக்காம தன் பர்சை மறந்து வச்சிட்டு வந்துடுவான். இப்பேர்பட்ட அப்பாடக்கர் கிட்டயே ஓ.சி`ல வாங்கி சாப்பிட்ட பெருமை என்னையே சாரும்.

நாம பஸ் ஸ்டாண்ட்`ல இருக்கோம். நம்ம கூட சாக்கட சாமிலும் வந்து சேர்ந்து கொண்டான்.

மச்சான்... எங்கடா போரீங்க....

நாம........ Majestic City போறாம்....

ஐ!! நானும் அங்கதான் போகலாம்`னு.....

இல்ல மச்சான்.. நாம Liberty Plaza போனா நல்லா இருக்குமே!!!

நானும் அங்கயே வர்ரேன்....

டேய்!!! நாங்க Galle Face போறோம்டா....

சரி.. நானும் சும்மாத்தானே இருக்கேன். நானும் வர்ரேன்..

அவ்வ்வ்வ்...... - நம்ம மைண்ட் வாய்ஸ்...

Gall Face கடற் கரை

அப்போ வந்த ஒரு பஸ்ஸுல ஏற பஸ் நடத்துனர் ரொம்ப பின் வரிசைல இருந்தார். சாக்கட சாமில் பர்சை வழமை போல ரூம்ல வச்சுட்டு வந்துட்டதால, மூனு பேருக்கும் க்ரேஸி பைசாவை சாக்கட சாமிலிடம்  ”மச்சான், டிக்கட் எடுத்துடுடா’’னு குடுத்துட்டான்.

பஸ்ஸ விட்டு இறங்கினதும் பஸ் நடத்துனர் நம்மள ஒரு மாதிரியா  முறைத்துக் கொண்டே போகிறான். அப்புறம்தான் சாக்கட சாமிலை பிடித்து உலுக்கினா, பய புள்ள டிக்கட் பைசாவ பாக்கட்`ல வச்சிகிட்டு இருக்கான். பஸ் டிக்கட் காசை அவன் பாக்கட் மணியாக்கிட்டான்.. ஷப்பா...... முடியல....

Gall Face கடற் கரை

Galle Faceஇல் கூட்டம் அலை மோதியது. நாமளும் போய் கூட்டத்தோடு கூட்டமா கடல் அலையில் ஆடிக் கொண்டிருக்கும் போது சாக்கட சாமிலின் வாழ்வில் அந்த கோர சம்பவம் நடந்தது. கடலில் வந்த ஒரு அலையில் சாக்கட சாமில் குதிக்க, நானும் க்ரேஸியும் அவன் டீ-ஷர்ட்டுடைய ஒரு பக்க கையை பிடித்து இழுக்க........................... அவ்வ்வ்வ்வ்வ்........ டீ-ஷர்ட்டுடைய  கை மட்டும் கிழிந்து நம்ம கையில் வந்துடுச்சு....

சாக்கட சாமிலின் முகத்தை பாக்கனுமே.... !!!!அய்யோ....அய்யோ..... Galle Faceஇல் இருந்த மொத்த கூட்டமும் சாக்கட சாமிலை பார்த்து சிரிக்கத் தொடங்கிடுச்சு.... சாக்கட சாமிலுக்கு நம்ம மேல செம காண்டு... நம்மளுக்கு உறுப்படியா ஒரு வேலை செய்த சந்தோசம்....

டேய்ய்ய்!! இது என்னோட டீ-ஷர்ட் இல்ல தெரியுமா.....????

ஆமா!!! நீ எப்போ சொந்தமா உடுத்திருக்கே!!!!!

டேய்!! இது எங்க அண்ணனோடதுடா!!!!

ஷப்பா.....!!! இப்போத்தான் நிம்மதியா இருக்கு... நாம புது டீ-ஷர்ட்`ஆ இருக்குமோ`னு பயந்துட்டோம்...

டேய்!!! மானம் போகுதுடா!!!! காப்பாத்துங்கடா`னு அழாத குறை.....
 அப்புறம் என்ன பண்ண??? என்ன இருந்த நம்ம பயளாச்சே!!! அவன மறைத்துக் கொண்டு போய் ஒரு மூத்திர சந்தில் “இருட்டும் வரை இங்கேயே கிட... அப்புறம் மெதுவா,ஆளில்லாத பஸ்ஸுல வீடு போகலாம்`னு குந்த வச்சிட்டு நாம நிம்மதியா ஒரு அழகிய மாலைக் காட்சியை ரசித்தோம்.... மாலை காட்சியை மட்டுமா ரசித்தோம்????? சரி அதெல்லாம் இங்க எதுக்கு????

அப்புறம் இருட்டானதும் அவனை வீடு கொண்டு செல்லப் பட்ட பாடு..... ஷப்பா.......

Gall Face கடற் கரை
Gall Face கடற் கரை
Gall Face கடற் கரை
Gall Face கடற் கரை