ஆனால், சின்ன பசங்க கிட்ட பல்பு வாங்கினா
எப்படி இருக்கும்????? (வாங்குரதே பல்பு!!! அதுல சின்னது என்ன பெருசு என்ன???) எப்பவுமே அடுத்தவன் காலை வாரி விடுரதுல உள்ள இன்பமே தனி (நல்ல கொள்கை) . ஆனால், சமயத்துல பூமராங் போல் நம்மளுக்கு திரும்பி வந்து போட்டு தாக்கிடுது.... (எப்பவுமே அப்படிதானே நடக்குது??)
பல்பு I
தம்பியிடம் முகத்தை கர்ண கொடூரமாக வைத்துக்கொண்டு...(இயற்கையிலேயே அப்படித்தானே!!!)
(அப்படி பண்ணினால்தான் கொஞ்சமாலும் பயப்படுராணுங்க...)
நான்: ஏன்யா? அந்த இடத்துக்கு போனே???
தம்பி: என் ப்ரண்டு போனான், அதுதான் நானும் போனேன்.
நான்: ஆமா....அவன் கிணற்றுல பாய்ந்தால் நீயும் பாய்வாயா???
(வார்த்டையாலேயே மடக்கிய இருமாப்புடன் ஒரு லுக்கு.....ஹி..ஹி...)
தம்பி: அமா!!! பாய்வேன்....
நான்: டேய்!!! என்னடா சொல்றே!!!!!
தம்பி: ஆமா!!!!! ஃப்ரண்டை காப்பாற்ற நானும் பாய்வேன்.
நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................................
பல்பு II
இன்னொரு சமயம் தம்பியிடம்...
நான்: யோவ்!!! மூனு கழுதை வயசாகுது..... இப்படியா வேலை செய்யுரது????
தம்பி: அப்போ ஒரு கழுதையோட வயசு நாலு வருசமா????
(அப்போது தம்பிக்கு 12 வயசு)
நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................................
இரண்டு பல்பு வாங்கின சம்பவங்களை போட்டுடா, இதுக்கு மேல பல்பு வாங்கியே இல்ல’னு நம்பிருவோமா???’னு வரும் கொம்மண்ட்’கள் மக்கள் பார்வைக்கு (இதையெல்லாம் எவன் பாக்குறான்???) வருமுன் வாண்டட்’ஆக அழிக்கப்படும்...