Tuesday 21 December 2010

நாங்கெல்லாம் கணக்குல அனகோண்டா (Anagonda )


இது நண்பர் வெங்கட்'இன் உலகப் புகழ் பெற்ற பதிவான நாங்கெல்லாம் கணக்குல டைனோசர்!!! பதிவுக்கு எதிர் பதிவு கிடையாது... என்னா இது அந்த அளவுக்கு  மரண மொக்கையா இருக்காது..  
நாம் ஒன்று'க்கு "1 " என்றும், இரண்டுக்கு "2 " என்றும் எழுதுறோமே! (ஆஹா! என்னா கண்டுபிடிப்புய்யா!!! ) அது ஏன்னு எப்பவாவது சிந்திச்சிருக்கோமா? (ஆபீஸ்'ல வெட்டியா குந்திட்டு இருந்தா இப்படித்தான்ய யோசிக்க தோணும்...    புரிஞ்சுதுல்ல ...சரி விடு...) ஏற்கனவே நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையும் ஐன்ஸ்டீன் இன்னும் பலதையும் (அது என்ன'ன்னு  தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?)  கண்டு பிடுத்து விட்டதால் நாம நம்ம மூளையை..  அதாங்க "GRAINN "னும்பான்களே!  பாவிச்சு (இதுல காமெடி கீமெடி ஏதும் இல்லையே)  ஏதாவது கண்டு பிடிக்கலாம்'னு  யோசிச்சப்போ இந்த மேட்டர் மனதில் பட்டது.. ( மூளைய பாவிச்சா மூளைலதனே படனும். அது  எப்படியா மனசுல பட்டிச்சு..)அப்படின்னு சொன்ன நம்பவா போறீங்க...  எங்க இருந்து சுட்டா என்னங்க... மேட்டர் நல்ல இருந்தா சரிதானே! எந்தக் கோழி போட்ட முட்டையா இருந்தா நமக்கென்ன... ஆம்லேட்'தானே முக்கியம்...


இப்போ மேட்டர்'க்கு  வருவோம்... நாம் ஏன் ஒன்றை "1 " எனவும் இரண்டை "2 " எனவும் எழுதுகின்றோம். இதுல கூட லாஜிக் இருக்குங்க.... நாம் முன்னைய கால இலக்க வடிவங்களை (அது என்னங்க முன்னைய காலம் பின்னைய காலம்'ன்னு கேட்காதீங்க... எதை எதையோ மாத்துற நம்மாளுங்க, இலக்க முறையை மட்டும் சும்மா விடுவாங்களா?) பார்த்தோமானால், அதற்கு பதில் கிடைக்கும். ஆமாங்க... இந்த இலக்க உருக்களில் உள்ள கோணங்களின்  எண்ணிக்கையே அந்த இலக்கமாகும்... உதாரணமாக "1 " என்பதில் ஒரு கோணம் உண்டு..."2 " என்பதில் இரு கோணம் உண்டு.. "0" என்பதில் எந்த கோணமும் கிடையாது... இவ்வளவுதான்  மேட்டர்...


 இதை ஏற்கனவே E -mail 'ல  பார்த்திருந்தால் ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... பார்த்திருக்காவிட்டாலும் வாசிச்சுட்டு  ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... நீங்க ஓட்டு போட்டா போதும்... ஓட்டு போட்டா மட்டும் போதும்..

Monday 13 December 2010

நித்தியானந்தா எந்த குற்றமும் அற்றவர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஆதாரம் சிக்கியுள்ளது..

ரஞ்சிதா..




>>>>>




>>>>>




>>>>>




>>>>>




>>>>>




>>>>>




>>>>>




>>>>>




>>>>>



அட! அயோக்கியப் பயலே!
வெறும் பெயர சொன்னதுக்கு இந்த வேகத்துல வர்றியே...
பக்கத்துல இருந்து பார்த்த.. 
அந்த முற்றும் துறந்த சாமியார்
மனசு எவ்வளோ பாடு பட்டிருக்கும்..
யோசிங்க.... நல்லா யோசிங்க...


Friday 10 December 2010

DECEMBER மாத PIT புகைப்பட போட்டிக்கான போட்டோ..

இந்த மாத PIT புகைப்பட போட்டிக்கான தலைப்பு "அதிகாலை" . சரி நாமளும் நாம் சுட்ட (கேமரா'ல சுட்டதுங்க.. வேறு யார்கிட்டயும் இருந்து கிடையாது) போட்டோ'ல இருந்து நம் பங்குக்கு ஏதாவது அனுப்பலாமேன்னு பார்த்தா, எத அனுப்புறதுன்னு ஒரே குழப்பம்.(நம்ப முடியலையே!)  இருக்குற எல்லா போட்டோவுமே சூபெர்னு நீங்க நெனச்சா உங்கள நீங்களே தட்டி எழுப்புங்க.. ஒன்னு கூட உருப்படியா இல்ல... (அதானே பார்த்தேன்)  


எதோ நம்மளால முடிஞ்ச கொஞ்ச  போட்டோ'வ   போட்டிருக்கேன்.. இதுல எது நல்லாயிருக்கும்னு நீங்களே சொல்லுங்க... எதுவுமே  நல்லாயில்லன்னு சொல்லி (அதுதானே உண்மை) என் குழந்த மனச ( 20 வருசத்துக்கு முன்னாடியா?)  நோகடிச்சிரதீங்க... அழுதுருவேன்... ஆமா..நெசமாவே அழுதுருவேன்..



1 . SHARJAH 'வின் அழகிய கடற்கரை, காலை வேளையில்...
2 . இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..

3. இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
4 . இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
5 . இலங்கையின்  MELSIRIPURA  -MATALE நகரங்களை இணைக்கும் bypass  வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
6 . இலங்கையின்  MELSIRIPURA  -MATALE நகரங்களை இணைக்கும் bypass  வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
7 . ஐக்கிய அரபு இராச்சியத்தில் RAS -AL -KHAIMAH 'வின் WADI AL SFINI எனும் ஊரின் சூர்யோதயம்..
  
8 . ஐக்கிய அரபு இராச்சியத்தில் ABU DHABI 'யிலுள்ள SHIEIK ZAYED MASJITH 'இன் அதி காலை தோற்றம்.
9 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து .... ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
10 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து BURJ DUBAI & BUSINESS BAY .   ஒரு குளிர் கால அதி காலை வேளையில்..
11 . இதுவும் ஒரு அதி காலைதான் . நம்புங்கள்..
12 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து SHEIK ZAYED ROAD ... ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
13 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து JUMEIRA & BURJ AL ARAB 7 STAR HOTEL. ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
ம்ம்ம். உங்களுக்கு புடிச்ச போட்டோ'வின் இலக்கத்தை சொல்லுங்க.. இன்னும் 4 நாட்கள்தான் உள்ளது..ம்ம்ம்    ம்ம்ம் சீக்கிரம்...

Wednesday 8 December 2010

தில்லாலங்கடி


ஒருத்தன் கையில்
மினு மினுப்பான  உலோகம் ஒன்று கிடைத்தது..
அதை வைத்து என்ன செய்யலாம்?
என்று யோசிச்சவன் மண்டையில 
உதிச்சது ஒரு உல்டாலக்கடி ஐடியா 
அதன்  படி 
சில தங்க காசுகளை  செய்து
விற்றுவிட்டான்.
பய புள்ளக்கு சந்தோசம் தாங்க முடியல….
ஆனால்
சில நாட்களில் தெரிந்தது
அந்த உலோகம் தங்கத்தை விட
  ஐந்து மடங்கு பெறுமதியான
பிளாட்டினம் (Pt) எனும் உலோகம் என்று…
(இது ஒரு உன்மைச் சம்பவம்)

Monday 6 December 2010

மச்சி........ எனக்கு கல்யாணம் ஆச்சுடா……….





நான் விடுமுறையில் இருந்த போது பழைய நன்பன் (ப்லாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து எல்லானுமே பழைய நன்பன் லிஸ்ட்`ல சேர்ந்துட்டானுங்க.. எவனுமே நம்ம கூட கூட்டு வைக்கிறது கிடையாது) (”ஓட்டு போடு ஓட்டு போடு”னு நீ குடுக்குற டார்ச்சர எவன்யா தாங்குவான்) ஒருவனை சந்திக்க நேர்ந்தது. அவனுக்கு புதுசாத்தான் கல்யாணம் ஆச்சு. அவனுக்கும் எனக்கும் நடந்த சில உறையாடல்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இதை வாசித்து நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்….



சந்திப்பு 1:

நன்பன் : டேய் மச்சி! முன்பு இங்குதானடா நாம கிரிக்கட் விளையாடுவோம்

நான் : ஆமா! அதுக்கென்ன? இப்பவும் விளையாடினா போச்சு!

நன்பன்: இப்பொ முடியாதுடா………

நான்: ஏண்டா? உடம்பு சரியில்லையா?

நன்பன்: இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுள்ள…….

நான்:???????????????????????????????????????????
(பார்ரா….)



சந்திப்பு 2:

நன்பன்: ஞாபகம் இருக்காடா! முன்பு ஆற்றுக்கு குளிக்க போவோமுள்ள……

நான்: ஆமாண்டா! இன்றும் போவோமா?


நன்பன்: இல்லடா மச்சி! முடியாதுடா….

நான்: ஏண்டா? ஆத்துல தண்ணி இல்லயா?

நன்பன்: அது இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுல்ல……….

(உன்னைய நம்பி எவன்யா ஆத்துல இறங்குவான்?)

நான்: ???????????????????????????????????
(சரி விடு)



சந்திப்பு 3:

நன்பன்: முன்பு க்ரேஸி வீட்டு மொட்ட மாடில இருந்து ராத்திரி பூரா பேசிட்டிருப்போமுள்ள…..

நான்: ஆமாண்டா…! இன்றும் SET ஆகுவோமா?


நன்பன்: முடியாதுடா! …………………………………..
(நீ கூப்பிட்ரதே ஓ.சி. டீ குடிக்கதான்னு அவனுக்கு தெரிஞ்சுரிச்சி போல…)



நான்:?????????????????????????????????????????
(ஷப்பா….. இப்பவே கண்ண கட்டுதே…)



சந்திப்பு 4:

நன்பன்: முன்பு விடுமுறை வந்தா சுற்றுலா போவோமுள்ள….

நான்: ஆமா! நானும் போகலாம்னு இருக்கேன்.வாரியா?

நன்பன்: நோ!!!!!!

நான்: ஏண்டா? உனக்கு வாந்தி பேதியா?

நன்பன்: மச்சி! கல்யாணம் ஆச்சுடா.. அப்படியெல்லாம் வெளில சுத்த முடியாதுள்ள…

நான்:??????????????????????????????????????????
(முடியல…..)



சந்திப்பு 5:

நான்: மச்சி! நம்ம நன்பன் xxx வீட்டுக்கு போரேன்… வாரியா?

நன்பன்:……………………………….


நான்: ஓ! ஸாரி…. உனக்கு கல்யானம் ஆச்சுல்ல………..
(என்ன கொடும சார் இது)

ஏனுங்க… கல்யாணம் என்பது இவ்வளவு பெரிய கொடுமையா? இல்ல, இவனுங்களே இப்பாடி ஆக்கிக் கொள்ரானுங்களா`ன்னு புரியல… யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா………

இதற்கு விளக்கம் சொல்வதால் வரும் முன் விளைவு, பின் விளைவு, பக்க விளைவு, மேல், கீழ் விளைவு என எதற்கும் இந்த ப்லாக் பொறுப்பேற்க மாட்டாது……