Tuesday 14 September 2010

பட்டாளத்தானிடம் பட்டால்…….



ஒரு முறை கொழும்பிலிருந்து
பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது
நம் பஸ்ஸிற்கும்
முன்னாள் சென்ற பஸ்ஸிற்கும் போட்டியாகி விட்டது.
முன்னாள் சென்ற பஸ் ஓட்டுனர்
மெதுவாக சென்றதுமல்லாமல்
நமக்கு முந்திச் செல்ல இடமும் குடுக்கவில்லை.
நம் பஸ்ஸின் ஓட்டுனரோ சத்தம் (Horn)
எழுப்பிக் கொண்டே செல்ல
(என்னையும் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டானுங்க..)
அதில் கடுப்பான முன்னாள் பஸ்ஸின் ஓட்டுனர்
பாதையின் குறுக்காக பஸ்ஸை நிறுத்தி விட்டு
இறங்கி வந்து நம்ம நம் பஸ் ஓட்டுனரிடம்
சண்டையிட்டு அடிக்கவும் செய்தார்.

தமது ஓய்வுக் காலம் முடிந்து யுத்தக் களத்துக்கு
சென்று கொண்டிருந்த நான்கு படை வீரர்கள்
நம் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே கடுப்பில் இருந்தவர்கள்,
இதை பார்த்தவுடன் கோபத்தின் உச்சத்துக்கே சென்றனர்.
(எத்தனை மீட்டர் உயரம்?)
இறங்கிச் சென்று வசமாக மாட்டிய
அந்த ஓட்டுனரை கும்மு கும்மு என்று கும்மினர்.
தாம் படித்த எல்லா கலைகளையும் ஓட்டுனர் முகத்தில்
ஒத்திகை பார்த்தனர்…..
அவர் வந்த வேகத்திலேயே திரும்பி ஓட
இவர்களும் அடுத்த பஸ் வரை
விரட்டி விரட்டி உதைத்தனர்.

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓட்டுனர்
அதன் பின் நம்ம பஸ்ஸுக்கு வழி விட்டு விட்டு
வலியுடன் பின்னால் வந்தார்.
மீண்டுமொறு மீன் தன் மீதே மசாலாவை
தடவிக்கொண்டு எண்ணையில் குதித்தது…




(நான் தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்திருப்பதால், பதிவுலக நன்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும். ஆனாலும் பதிவு போடாமல் உங்களை நிம்மதியாக இருக்க விடவும் மனமில்லை. அதனால்தான் இந்த திடீர் பதிவு........ )

Sunday 5 September 2010

மான்புமிகு மன்னனும் மக்கு மங்குனியும்..


ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ திலக etc….. பக்கத்து நாட்டு மன்னன் பரதேசி வந்து நம் மன்னனை சந்தித்து விட்டு போகிறார்….

அவர் போனதும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த மங்குனி அமைச்சரை கூப்பிட்ட மன்னன்…..
மன்னன் : தற்பொழுது வந்து போவது யாரென்று தெரியுமா?
மங்குனி : அவனா? பக்கத்து நாட்டு பரதேசி
மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (சென்ஸார்) ஒரு நாட்டு
          மன்னனை அப்படியா கூப்பிடுவது?
          ஒரு மரியாதைக்கு “திரு” என்று அழக்க வேண்டுமென்று உமக்கு
          தெரியாதா….
          (மன்னனின் கோபத்தை பார்த்த மங்குனி வேறு வழியில்லாமல்..)
மங்குனி  : புரிந்தது மன்னா..எல்லாம் நன்றாக புரிந்து விட்டது.

அடுத்த நாள்..
மன்னன் : மங்குனி… எனக்கு வைத்திருந்த பால் எங்கே?
மங்குனி : (எதையெல்லாம் அமைச்சரிடம் கேட்பது என்ற விவஸ்தையே
           இல்லையா?. மங்குனி…உஷார்.. நேற்று பட்ட அவமானம் இன்று                                                    
           படக்கூடாது…)
           மன்னா.. அதை ”திரு” பூனையார் குடித்து விட்டார்..

ஏற்கனவே பாலை இழந்த கடுப்பில் இருந்த மன்னனுக்கு இந்த பதிலை கேட்டதும் பல்ஸ் எகிறியது

மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (சென்ஸார்)
          வாழ்க்கையிலேயே  “திரு” என்ற வார்த்தையை பாவிக்கக்
          கூடாது.
மங்குனி  : !!!!!!!!!!!
(மங்குனி இதற்கும் வழமை போல தலையாட்டுகிறார்.)

மூன்றாவது நாள்
மன்னன் : மங்குனி… என் வாள் எங்கே?
மங்குனி : (அதை பற்றி போருக்கு போகின்றவர்தானே கவலை பட    
          வேண்டும். நம் மன்னன் எதற்கு கவலைப் படுகிறார். ஒரு
          வேலை அதற்காக இருக்குமோ, ஒரு வேலை இதற்காக
          இருக்குமோ!! என்று யோசித்தவாறு…. தயக்கத்துடன்….)
          மன்னா சமையல் கட்டில் எதாவது அவசர தேவையா?

மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (மீண்டும் சென்ஸார்)
          (கோவம் கொலை வெறியாக மாறினாலும் நிலைமையை
          கருத்தில் கொண்டு … மங்குனியின் காதருகில் சென்று )
          யோவ்! மங்குனி… முதுகு பயங்கரமா அரிக்குதுய்யா……..
          என்ன செய்வியோ.. ஏது செய்வியோ தெரியாது. அவசரமாக
          என் உடை வாள் வேண்டும்.
மங்குனி : (தயங்கியவாறே…)

          அது வந்து…….
         
          அது வந்து……..
         
          மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “டன் வந்து டிட்டுப்
          போய்விட்டான்”
மன்னன் : (ஒன்றும் புரியாத மன்னன்.)
          யோவ்… மக்கு மங்குனி நீர் என்னய்யா சொல்கிறீர்?
மங்குனி : (சென்ற முறை மாதிரி இந்த முறை பல்பு வாங்கக் கூடாது.
          உஷார்…..)
          ஆமாம் மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “டன் வந்து
          போய்விட்டான்”
மன்னன் கோபத்தில் மங்குவின் சங்கை கடிக்கிறார். நிலவரம்                               மோசமடைவதை உணர்ந்த மங்கு………. மீண்டும் கத்துகிறார்.
மங்குனி : மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “திரு”டன் வந்து                  
          ”திரு”டிட்டுப் போய்விட்டான்”

Wednesday 1 September 2010

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்


என்னையும் ஒரு பதிவராக மதித்து தொடர் பதிவுக்கு அழைத்த நன்பன் ஹாய் அரும்பாவூர் முபாரக்`கிற்கு என் நன்றிகள் ( முபாரக்`ற்கு 4 குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் பார்சல்....)
(யோவ் நீ பதிவெழுத வந்தே ஒரு மாதந்தான் ஆச்சு… அதுக்குள்ளயா...? சாதனை படைத்து விட்டு கின்னஸில் எழுதுவது உங்க பாணி…. கின்னஸில் எழுதி விட்டு சாதனை படைப்பது எங்க பாணி…. நோ நோ… பாணியைப் பற்றி பேசினா யாருப்பா அது சாணி அடிக்கிறது.. )

பதிவுலகில் எனக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கும் என் இம்சை தாங்காமல் ஓட்டு மற்றும் பின்னூட்டம் இடும் நன்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்…
அது சம்பவம் அல்ல சரித்திரம்..
அது விபத்து அல்ல விசித்திரம்
சினிமாவில் ஹீரோ அறிமுகக் காட்சியில் கெமராவக் கொஞ்சம் ஆட்டுரது வழக்கம். அதுதான் நாமளும் கொஞ்சம் செய்து பார்க்கலாமென நம்ம கெமரா காரருக்கு குடுத்த இம்சையில் பயபுள்ள போட்டோவை இப்படி எடுத்துவிட்டான். (யோவ்…… உன் போட்டோவ விட இது எவ்வளவோ நல்லாயிருக்கு)



1.அது என்ன புன்னகையே வாழ்க்கை ?
இதை எங்கே சுட்டேன் என்று தெரியாது. ஆனால் ரொம்ப நாளாக என் பெயருடன் எழுதி வருகிறேன்.  அதனால் தலைப்பை தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்க வில்லை.
  பதிவுலகத்திற்கு வர காரணம் ?
        கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் பயங்கர பிஸியாக  வலையுலகில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக அழுத்தியதில் ஒரு பதிவு திறந்து விட்டது. அநேகமாக அது “இட்லி வடை”யாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பின் நியூஸ் பானை, தமிலிஷ் என அறிமுகமாகி 2 வருடங்கள் வெறும் பின்னூட்டம் மட்டுமே இட்டுக் கொண்டிருந்தேன். பதிவு ஆரம்பிக்க ஆசையிருந்த்தும் ஒரு நமக்கு எழுதுவதில் இருந்த ஆர்வம்!! பற்றி தெரிந்திருந்ததால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.( தப்பிவிட்டோம் என்று சிரிக்க வேண்டாம்.. மீண்டும் வருவேன்)  ஒரு நாள் நன்பர் Mr. Zakir இன் இருப்பிடத்துக்கு சென்ற போது அவர் ”உன்மை உணர்வுகள்” எனும் பதிவு எழுதுவது தெரியவந்தது. அப்போதுதான் ஆஹா நாமும் ஆர்ம்பித்தால் என்ன? என்று யோசித்தேன். எனக்கு சொந்தமா எழுத வராது. எதையாவது சுட்டு நம் பதிவில் இட்டால் கூட இப்போ கும்மு கும்மு என்று குமுறிர்ராணுங்க… என்ன பன்னலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். எனக்கு பிரச்சனையே அதிகம் எழுத முடியாமையே…அப்பொது கோகுலத்தில் சூரியனில் நன்பர் வெங்கட்`டின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆக்கமும் 4- 10 வரிகளில் சும்மா நச்`ண்டு இருக்கும். நாமும் இப்படியாவது ஆரம்பிப்போம் என்று எழுத ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான் தெரிந்தது, நிறைய எழுதுவது கஷ்டமல்ல.. கொஞ்சமாக எழுதுவதுதான் கஷ்டமென்று…

 எப்படி தொடங்குவது என்று யோசித்த போது Miss. Sumajla அக்காவின் ”ப்ளாக் தொடங்குவது எப்படி?” என்ற பதிவு கிடைத்தது.அதை பின்பற்றி ஆரம்பித்தேன். மின்னஞ்சல் மூலமும் நிறைய உதவிகள் செய்தார்.. பின்பு ப்லாக்`கை மெருகேற்ற நன்பர் Mr. Zakir (உன்மை உணர்வுகள்) மற்றும் நன்பர் Mr. Mubarak (ஹாய் அரும்பாவூர்) ரொம்ப உதவினர்.

 நாமும் எதாவது நாலு பேருக்கு பிரயோசனாமாக எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. ஆனால் தட்டச்சில் கை வைத்தும் வெறும் மொக்கை மட்டும்தான் வருகிறது.
  2.முதல் பதிவை பற்றி ?
ப்லாக் ஆரம்பித்து ஒரு மாதம் வரை எதுவுமே எழுதவில்லை. வெறுமனே டெம்ப்லேட் மாற்றிக்கொண்டும் விட்ஜெட் மாற்றிக்கொண்டும் காலத்தை ஓட்டினேன். காரணம் முதல் பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பின்பு ஒருவாறு ”வெள்ளோட்டம்” என்று ஒரு அறிமுகப்படுத்தும் விதமாக எழுதினேன். பின் அபூதாபியிலுள்ள் ஷேக் சையத் மஸ்ஜித் பற்றி எழுதலாம் என எண்ணி அம்மஸ்ஜிதுக்கு சென்று புகைப்படங்களை சுட்டு வந்து ஒரு பதிவு எழுதினேன்.

3.முதல் பாராட்டு 
முதல் பின்னூட்டமாக வந்த பாராட்டு Miss.புவநேவரி ராமநாதன்`னிடம் இருந்து வந்தது. தொலை பேசியில் Mr. Deva அண்ணா, நன்பர் ஞானசேகர் தொடர்பு கொண்டு ஊக்கமளித்தார் (கடந்த வாரம் ஒரு இரவில் நன்பர் முபாரக் தொடர்பு கொண்டு பேசினார். நானும் தூக்க மயக்கத்துடன் பேசினேன், என்ன பேசியிருப்பேன் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்). Gtalk’இல் நன்பர் பனித்துளி சங்கர் , நன்பர் அருன் ப்ரசாத் போன்றோர் ஊக்கமளித்தனர். Mr. Venkat (கோகுலத்தில் சூரியன்),  என் ஒவ்வொறு எழுத்தாக வாசித்து (என்ன கொடுமப்பா…)  நிறைய Tips தந்தார். இன்றும் இவர்களது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் பின்னூட்டம் இடும் நன்பர் ஸாகிர், நன்பர் கோமாளி, நூறு கவிதை புகழ் வெறும்பய (கவிஞர் வெறும்பாதி) சௌந்தர், சிரிப்பு பொலீஸ், அருன் ப்ரசாத், அபுல் பசார், அப்துல் காதர், பென்னி, ரியாஸ் இன்னும் இதர நன்பர்களுக்கும் என் நன்றிகள்.

4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?
இரண்டுக்குமே சம உரிமைதான். நம் பதிவு பல பேரை சென்றடைய வாக்கு அவசியம். பின்னூட்டம் மேலும் மேலும்  நம்மை எழுதத் தூண்டும். (”ஐ….   இதுதானா மேட்டரு.. இதுக்கு பின்னாடி உனக்கு பின்னூட்டமே கிடையாது” என்றெல்லாம் சொல்லக் கூடாது)
தொழினுட்ப பதிவுகளுக்கு, பொது அறிவு, வரலாறு போன்ற பதிவுகளுக்கு கட்டாயம் வாக்களிப்பேன். அடுத்த பதிவுகள் பிடித்திருந்தால் வாக்களிப்பேன். Animation Films, ARRahman தவிர்ந்த எந்த சினிமா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதோ வாக்களிப்பதோ கிடையாது.

ச்சும்மா...

5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்விர்கள் ?
இண்ட்லி, தமிழ் 10, உழவு, இலங்கை பதிவர்கள் போன்ற திரட்டிகளில் இணைக்கிறேன். பதிவுலக நன்பர்களுக்கு G Talk, Gmail மூலம் தெரிவிக்கிறேன். நன்பர்களுக்கு கிடைக்கிற Gap`இல் எல்லாம் பதிவு போட்டிருக்கிறேன், படிச்சியா? படிச்சியா? என்று torture குடுக்கிறேன்.  

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?
என்னது? ஆதரவா? அமீரகத்தில் ஆட்டோ இல்லாத்தால் தப்பித்திருக்கிறேன். இல்லாவிடில் எப்போதோ என் கதை முடிந்திருக்கும். அவ்வளவு இம்சை குடுத்திருக்கிறேன். சில வேளை வாக்களிப்புக்காகவும் பின்னூட்டத்திற்காகவும் மிரட்டலும் விட வேண்டியதாகி விடுகிறது. முன்பெல்லாம் Yahoo Meassanger, G talk, Skype, Face Book என எல்லா வழிகளிலும் மொக்கை போட்ட பயலுக நம்மளை கண்டாலே பின் வாசல்(sign out) வழியாக தப்பிச்சிர்ரானுங்க…. ஆனாலும் நாங்க விட மாட்டோமுள்ள… 

7.உங்களுக்கு பிடித்த  பதிவர்?
புன்னகையே வாழ்க்கை” என்று ஒரு பதிவுங்க.. Mr. Faaique என்று ஒரு பையன் சூப்பரா எழுதுரானுங்க.. அப்படி சொன்னால் நீங்க நம்பவா போரீங்க….
நிறைய பேர் உண்டு…… ஒரு சிலரின் எல்லா பதிவுகளும் பிடிக்கும். சிலவேளை சிலரது ஒரு சில பதிவுகள் மாத்திரம் பிடிக்கலாம்.   

8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கிறது… தூங்கும் நேரம் குறைந்துள்ளது. (அலுவலகத்திலா .. வீட்டிலா?) அதிக நன்பர்கள் வட்டம், அவ்வளவுதான்…..

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?
நிறையவே….. உலகமெல்லாம் நன்பர்கள் கிடைத்துள்ளனர்… 


10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?
அடுத்தவர்களுக்கு கருத்து சொல்வதை விட, அடுத்தவர்களிடம் இருந்து நான் கேட்க வேண்டியவை நிறைய இருக்கு…….
பதிவெழுதுதல், பதிவுலகம் பற்றி பாடசாலை மட்டத்தில் அறிமுகம் செய்து மாணவர்களின் நல்ல பதிவுகளை, ஆக்கங்களை வெளியுலகிற்கு கொண்டு வரவும்,  சொந்தமாக பதிவு எழுத வைக்கவும் திட்டம் ஒன்று உள்ளது. நான் அமீரகத்தில் இருந்து கொண்டு இந்த திட்டம் எந்தளவு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.