Wednesday 28 July 2010

வெள்ளோட்டம்

வணக்கம்,
பதிவுலகம் எனும் கடலில் நானும் என் அனுபவங்களையும், எண்ணங்களையும், கனவுகளையும், கருத்துக்களையும் மக்களுக்கு சென்றடையாத சில உண்மைகளையும் எழுதலாம் என்று எண்ணி காலடி வைத்துள்ளேன். எழுத்துலகம் எனக்கு மிகவும் புதியது. நான் ஒரு சராசரி எழுத்தாளன் கூட கிடயாது. இருந்தும் தெரியாது என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பவனும் இல்லை. தெரிந்ததை எழுதுகிறேன் தெரியாததை படித்துக்கொள்கிறேன். சில பிரபல பதிவாளர்களின் முன்னைய பதிவுகளையும் தற்போதைய பதிவுகளையும் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அவர்களது முன்னேற்றத்துக்கு காரணம் உங்களுடைய ஊக்குவிப்பும் உற்சாகப்படுத்தலுமேயாகும். நானும் உங்களிடம் எதிர்பார்ப்பது இதையே.
"சரியாயின் தட்டிக்கொடுங்கள் தவறாயின் குட்டுங்கள்"

(நான் ப்ளாக் ஆரம்பிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்த Miss. Sumazla (http://sumazla.blogspot.com/) அவர்களுக்கும் எனது நண்பரும் பதிவருமான Mr.Zakir  (http://unmaiunarvugal.blogspot.com/) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.)